முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 16 மார்ச், 2023

பரங்கிப்பேட்டை அரசு டவுன் காஜிக்கு பாராட்டு நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை அரசு டவுன் காஜிக்கு பாராட்டு நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை அரசு டவுன் காஜியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் மேனாள் செயலாளர் மவ்லவி ஹாஃபிழ் ஏ. லியாகத் அலி மன்பயீ அவர்களுக்கு பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இன்று (16.03.2023 வியாழன்) காலை குத்பு முஹ்யத்தீன் (புதுப்பள்ளி) ஜும்ஆ பள்ளிவாசலில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை கவுரவ தலைவர் எம்.எஸ். காஜா மொய்னுதீன் மிஸ்பாஹி அவர்கள் தலைமையில்,  சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் எம். அப்துல் காதர் மரைக்காயர் உமரீ அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டையின் பெரும்பாலான உலமாக்கள் பங்கேற்றனர். 

அரசு டவுன் காஜி லியாகத் அலி மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் சேவைகள் சிறப்பாக தொடர அனைவரும் வாழ்த்தி துஆ செய்தனர். 

அத்துடன் 50 ஆண்டுகளாக மார்க்கச் சேவையாற்றி, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் விருது பெற்ற அப்துல் காதர் மரைக்காயர் உமரீ ஹஜ்ரத் அவர்களுக்கும் சால்வை அணிவிக்கப்பட்டு வாழ்த்துரை வழங்கப்பட்டது. 

துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
















Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி