முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

செவ்வாய், 3 ஜூன், 2014

மஹ்மூதிய்யா மதரஸா பட்டமளிப்பு விழா

பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் பல்லாண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் அல் மதரஸ(த்)துல் மஹ்மூதிய்யா திருக்குர்ஆன் மனனக் கல்லூரி, சென்னை காஷிஃபுல் ஹுதா அரபுக் கல்லூரியுடன் இணைந்து திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களை உருவாக்கி சமுதாயத்திற்கு வழங்கி வருகின்றது.

இக்கல்லூரியின் எட்டாம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா குறித்த செய்தியினை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.










வியாழன், 15 மே, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா

தொடர்ந்து பத்தாவது ஆண்டாக பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் நடைபெறும் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், சிறார்களின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சியும் மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சில புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு...
















 
புகைப்படங்கள்: ஷேக் ஆதம்

வியாழன், 8 மே, 2014

ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு செய்த நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுகள்

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் பத்தாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் முடிவடைந்து தேர்வுகள் நடைபெற்றன.
 
இதோ சில புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
புகைப்படங்கள்: ஷேக் ஆதம்

சனி, 19 ஏப்ரல், 2014

மீராப்பள்ளியில் தொடங்கியது நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்! (படங்கள்)

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கின. பத்தாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் முதல் நாளான இன்று 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ஆண் பிள்ளைகளுக்கும், 9 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியிலும், 9 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு தவ்லத் நிஸா மகளிர் அரபுக் கல்லூரியிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.

இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.
 
இவ்வருடம் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர். 







படங்கள்: ஷேக் ஆதம்

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற நபிமொழி (ஹதீஸ்) ஆய்வரங்கம்

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு செய்திருந்த நபிமொழி (ஹதீஸ்) ஆய்வரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
 
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை கடந்த வியாழக்கிமை (10.04.2014) மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கும்மத் பள்ளி தெருவிலுள்ள ரஹ்மான் மண்டபத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் குறித்த ஆய்வரங்கம் திருநெல்வேலி மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாஃபிழ் பி.ஏ. காஜா முய்னுத்தீன் பாகவீ அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது.
 
நபிமொழி (ஹதீஸ்) என்றால் என்ன? எப்படி தொகுப்பட்டது? நபிமொழி தொகுப்பாளர் (முஹத்தீஸ்) என்றால் யார்? மார்க்க சட்ட வல்லுநர் (முஃபக்கிஹ்) என்றால் யார்?  போன்ற விஷயங்கள் குறித்து சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி ஆலிம்கள் விரிவாக விளக்கம் செய்தனர். நிகழ்ச்சியில் ஆலிம்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
படங்கள்: ஷேக் ஆதம்




புதன், 26 மார்ச், 2014

வட்டார இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொதுக்குழு




சிதம்பரம் வட்டார இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பொதுக்குழு செவ்வாய்கிழமை காலை பின்னத்தூர் ஜாமீஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
 
இதில் மாநில ஐக்கிய ஜமாஅத் ஒருங்கினைப்பாளர் சிக்கந்தர், கடலூர் மாவட்ட ஜக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் முஹம்மது யூனுஸ், வட்டார தலைவர் ஜியாவுத்தீன், பரங்கிப்பேட்டை உட்பட சிதம்பரம் வட்டாரத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த பொதுக்குழுவில் பள்ளிவாசலுக்கு உள்ளே மற்றும் வெளியே நம் சமுதாயத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் நலத்திட்டங்களில் மாநில அளவில் ஒருங்கினைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.
இதில் வட்டார இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயல் திட்டம் மற்றும் பள்ளிவாசல்களின் இந்திய அரசியல் சாசன விதிமுறைகள் புத்தகமாக வெளியிடப்பட்டது.
 
செய்தி & படங்கள்: ஷேக் ஆதம்

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி