


இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,
பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,
அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,
பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
திருப்பூர் காங்கேயம் ரோடு அல்-அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஹெச்.எம். ஜபருல்லா பாகவி தலைமை தாங்கினார்.
திருப்பூர் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி வி.கே.எம். ஜகரிய்யா முன்னிலை வகித்தார்.
மௌலவி காரி அப்துன் நஸீர் பாகவி கிராஅத் ஓதினார்.
பெரிய பள்ளி இமாம் மௌலவி செய்யது அஹமது மிஸ்பாஹி வரவேற்புரையாற்றினார்.
டாக்டர் ஏ. அப்துன் நஸீர், ஐக்கிய ஜமாஅத் துணைத் தலைவர் ஹாஜி நஸீர் அஹமது ஆகியோர் உரையாற்றினர்.
உலமாக்கள் நல வாரிய பயன்பாட்டை அறியும் வழிமுறைகளை பற்றி வக்ஃபு வாரிய கண்காணிப்பாளர் சிராஜுத்தீன், வக்ஃபு வாரிய ஆய்வாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர்.
திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி நாசிர் அலி சிராஜி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வட்டார பகுதிகளிலிருந்து 68 பள்ளி வாசல்களின் இமாம்கள், முஅத்தின்கள், பணியாளர்கள், அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உலமாக்கள், பிலால்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை கோவை மண்டல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளர் என். சையது முஸ்தபா, திருப்பூர் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ஏ. முஹம்மது ரபி, ஹாஜி ஹபீப் ரஹ்மான், அப்துல் காதிர் ஜீலானி, ஜெய்னுல் ஆபிதின், அப்துல் சுக்கூர், எம்.ஒய். பக்கீர் முஹம்மது, பாபுஜி, ஹாஜி கலீலுர் ரஹ்மான் எம்.சி., உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், மாநில துணைத் தலைவர் பி.எஸ். ஹம்ஸா, திருப்பூர் மாநகர தலைவர் கே. சிராஜுத்தீன், துணைத் தலைவர் ஹாஜி முத்து வாப்பா (எ) அப்துர் ரஹ்மான், இளம்பிறை ஜஹாங்கீர், பள்ளப்பட்டி யூனுஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலமாக்களுக்கு வாழ்த்துக்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கு பாராட்டுக்களும் தெரிவித்தனர்.
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம....
இந்த வலைப்பூ மென்மெலும் சிறப்பாக செயல்பட தங்களுக்கு தெரிந்த ஆலிம்கள், அரபிக்கல்லூரிகள், இஸ்லாமிய ஊடகங்கள், ஊர்கள் மற்றும் பயனுள்ள இணையதளங்களின் முகவரிகளை எங்கள் பேரவையின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள்.
தமிழ் கூறும் சமுதாய மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த அழைப்பை தாங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி!
வஸ்ஸலாம்!!
1. ஷரீஅத்தை பாதுகாப்பது.
2. மக்தப் (குர்ஆன் பள்ளி) மதரஸாக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு.
3. மார்க்க விளக்க சொற்பொழிவுகள்.
4. பெண்கள் பயான்கள்.
5. கோடைக்கால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி முகாம்கள்.
6. புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டல் நிகழ்ச்சிகள்.
7. பிரசுரங்கள் வெளியீடு.
8. இணைய வழி இஸ்லாமியப் பிரச்சாரம்.
9. கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முகாம்கள்.
10. இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள்.
இன்ஷா அல்லாஹ்...! இன்னும் பல சேவைகள்....!!
ulamaa.pno@gmail.com / pno.ulamaa@gmail.com
அலுவலக முகவரி:
நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை,
11/12, கும்மத் பள்ளி தெரு,
பரங்கிப்பேட்டை - 608502,
கடலூர் மாவட்டம்.
பரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது.
வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது.
ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.
கி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார்.
அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.
இங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது.
இதன் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.
இரயில் நிலையம்:
விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது.
சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
அருகில் உள்ள விமான நிலையங்கள்:
திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.
அஞ்சல் குறியீடு (Pincode): 608502
ISD / STD குறியீடு: (+91) 4144
பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் வலைப்பூவிலிருந்து...
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,901 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.
இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.
பரங்கிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும்.
இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.
பரங்கிப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி.
இங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் ஆறு நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன.
இந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் (Marine Biological Station) ஒன்றினை நிறுவினர்.
இந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது.
இதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகின்றனர்.
ஓரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது.
ஆய்வுக்காக ஒரு கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன.
பரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் ஸ்டேஷன் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பித்தக்கது.
தமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் தொகுப்பிலிருந்து...
இங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.
அடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது.
போர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது.
இங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள்.
மாலுமியார், அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்திலிருந்து...