
அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த ஆண்டு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை பகுதிகளில் இருந்து 500 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஹஜ் பயணம் குறித்த விளக்கம் மற்றும் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி முகாம், கடலூர் மஞ்சக்குப்பம் கே.எஸ்.ஆர்.மகாலில் புதன்கிழமை காலை 9-30 மணி முதல் மாலை 5-30 மணி வரை நடக்கிறது.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பயிற்சி அளிக்க உள்ளனர் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.