நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர் M.S.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி தலைமை தாங்க A.லியாகத் அலி மன்பஈ இறைவசனம் (கிராஅத்) ஓதி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
B.நூருல்லாஹ் பாஜில் பாகவி வரவேற்புரை நிகழ்த்த பரங்கிப்பேட்டை நண்பர்கள் அமைப்பின் (Friends PNO) தலைவர் M.K.நிசார் அஹ்மத் வாழ்த்துரை வழங்கினார்.
பரங்கிப்பேட்டை மஹ்மூதியா அரபிக் கல்லூரி முதல்வர் A.சித்திக் அலி பாகவி, மூனா பள்ளியின் முதல்வர் M.பாண்டியன், K.M.மீரான் முஹ்யித்தீன் ரஷாதி ஆகியோர் தங்களது உரையில் இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பினையும்-தியாகத்தையும் பற்றி விரிவாக பேசினார்கள்.
மக்ரிப் தொழுகைக்காக நேரம் விடப்பட்டு-பின் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
நிகழ்ச்சியினை M.முஹம்மத் ஷேக் ஆதம் தொகுத்து வழங்கினார்.
இறுதியாக A.லியாகத் அலி மன்பஈ நன்றியுரை ஆற்றினார்.
இஷா தொழுகைக்கு பாங்கு சொல்லவே நாம் விட்டோம் ஜூட்.....!
கட்டுரை & படம்: நமது நிருபர் - சுஹைல்