படங்கள்: ஷேக் ஆதம்
முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,
பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,
அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,
பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
சனி, 19 ஏப்ரல், 2014
மீராப்பள்ளியில் தொடங்கியது நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்! (படங்கள்)
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கின. பத்தாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் முதல் நாளான இன்று 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ஆண் பிள்ளைகளுக்கும், 9 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியிலும், 9 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு தவ்லத் நிஸா மகளிர் அரபுக் கல்லூரியிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.
இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.
இவ்வருடம் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
படங்கள்: ஷேக் ஆதம்
செவ்வாய், 15 ஏப்ரல், 2014
பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற நபிமொழி (ஹதீஸ்) ஆய்வரங்கம்
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு செய்திருந்த நபிமொழி (ஹதீஸ்) ஆய்வரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை கடந்த வியாழக்கிமை (10.04.2014) மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கும்மத் பள்ளி தெருவிலுள்ள ரஹ்மான் மண்டபத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் குறித்த ஆய்வரங்கம் திருநெல்வேலி மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாஃபிழ் பி.ஏ. காஜா முய்னுத்தீன் பாகவீ அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது.
நபிமொழி (ஹதீஸ்) என்றால் என்ன? எப்படி தொகுப்பட்டது? நபிமொழி தொகுப்பாளர் (முஹத்தீஸ்) என்றால் யார்? மார்க்க சட்ட வல்லுநர் (முஃபக்கிஹ்) என்றால் யார்? போன்ற விஷயங்கள் குறித்து சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி ஆலிம்கள் விரிவாக விளக்கம் செய்தனர். நிகழ்ச்சியில் ஆலிம்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படங்கள்: ஷேக் ஆதம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)