முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

திங்கள், 6 ஏப்ரல், 2009

இறைவனை அஞ்சி நடப்பதில் இலக்கணம் வகுத்த பெண்கள்
-------------------------------------------------------------------------------- இந்தப் பகுதியில் நமது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு நமது சகோதரிகள் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதைப் பற்றியும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்களைப் பற்றியும் பேசி வந்தோம்.
நமது சகோதரிகளைப் பற்றிப் பேசிடும் போது இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தவர்கள்.
தொடக்கத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த போது தன்னால் இயன்ற உதவிகளையெல்லாம் செய்தார்கள் கதீஜா (ரலி) அவர்கள். பொருளால் அவர்கள் செய்த உதவிகளுக்கு அல்லாஹ்வே போதிய அளவில் நற்கூலிகளை வழங்கிட முடியும். அந்த அளவுக்கு தனது பொருள்களையெல்லாம் இறைவனின் பாதையில் தத்தம் செய்தவர்கள் - அள்ளித் தந்தவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்கள்.
அவர்களுக்குப் பின் இஸ்லாமிய இயக்க வளர்ச்சியில் பல்வேறு பெண்களும் ஆற்றிய அருந்தொண்டை பட்டியல் போட்டால் மாளாது. அதுபோல் தான் ஃபாத்திமா (ரலி) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும்.
அவர்கள் இஸ்லாமிய இயக்க வளர்ச்சியில் மட்டுந்தான் நடுநாயகமாக விளங்கினார்கள் என்றில்லை. அவர்கள் இறையச்சம் என்ற இறைவனi அஞ்சி வாழ்வதிலும் நல்லதொரு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
அந்த வகையில் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி!
கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம்.
இரவு நேரத்தில் மதீனா நகரைச் சுற்றி நகர்வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இரவின் நடுப்பகுதி. அவர்கள் களைத்துப் போய் விட்டார்கள். ஒரு சுவர்மேல் சாய்ந்திருந்தார்கள். அப்போது வீட்டுக்குள் பெண்ணொருத்தி தன் மகளிடம் இப்படிக் கூறினாள் : மகளே! எழுந்திரு. அந்தப் பாலை தண்ணீருடன் கலந்து வை.
இதற்கு மகள் தாயிடம் இப்படிக் கேட்டாள் : தாயாரே.. நீங்கள் அமீருல் முஃமினீன் (நம்பிக்கையாளர்களின் தலைவரின்) கட்டளையைச் செவிமடுக்கவில்லையா?
தாயார், அந்தக் கட்டளை என்ன? என்று கேட்டாள். அதற்கு மகள் அவர்கள் ஒருவரிடம் சொல்லி உரக்க ஒலிக்கக் கட்டளையிட்டார்கள். அது, பாலில் தண்ணீர் கலக்கக் கூடாது என்பதே!
இதைக் கேட்டதும் தாய் இப்படிச் சொன்னாள் : எழுந்து பாலை தண்ணீரோடு கலந்து வை. நீ உமர் உன்னைப் பார்க்க முடியாத இடத்தில் இருக்கின்றாய் என்பதைத் தெரிந்து கொள்.
இதைக் கேட்ட மகள் இப்படிப் பதில் சொன்னாள் : நம்பிக்கையாளர்களின் தலைவர் பார்க்காவிட்டால் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். வெளியில் அல்லாஹ்வை கீழ்ப்படிவதைப் போல் நடந்து கொண்டு அந்தரங்கத்தில் கீழ்ப்படியாமல் இருக்க என்னால் முடியாது.
ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள் இதைச் செவிமடுத்தார்கள். உடனேயே தன்னுடன் வந்த உதவியாளர் அஸ்லம் (ரலி) அவர்களை அழைத்து அந்தப் பெண் யார் என்று அறிந்து வாருங்கள் என்றார்கள். அந்தப் பெண் யாரோடு பேசிக் கொண்டிருந்தாள், அவளுக்குத் திருமணமாகி விட்டதா என்பதையெல்லாம் கண்டு வாருங்கள் என்றார்கள். அஸ்லம் விசாரித்து, அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகவில்லை என்பதை வந்து சொன்னார்.
உடனேயே உமர் (ரலி) அவர்கள் தன் மகன்களை அழைத்து வரச் சொன்னார்கள். மகன்களும் வந்தார்கள். அவர்களில் ஆசிம் (ரலி) அவர்கள் அந்தப் பெண்ணை மணந்து கொண்டார்கள்.
இந்தத் தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்தார். அவர் தான் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரலி) என்ற இறையச்சமிக்க பின்னாள் ஆட்சியாளரின் தாய் ஆனார். இவரைத் தான் வரலாறு இரண்டாம் உமர் என்று அடையாளம் காட்டுகின்றது.
இஸ்லாத்தின் பிந்தைய வரலாற்றில் இவர்மிகவும் இறையச்சமுள்ள ஓர் ஆட்சியாளராய் திகழ்ந்தார்கள். இப்படி இறையச்சத்தில் மிகைத்தவர்களாகவும் இறையச்சமுள்ள தலைமுறையைத் தருபவர்களாகவும் திகழ்ந்தார்கள் இஸ்லாமியப் பெண்கள்.
கலீஃபா உமர் (ரலி) அவர்களே மிகையான இறையச்சம் உள்ளவர்கள். அவர்கள் இறையச்சமிக்க அந்தப் பெண்மணியைத் தான் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக மருமகளாக ஆக்கி மகிழ்ந்தார்கள்.
அவர்கள் இன்னொரு பெண்ணுக்கு அச்சப்படவும் செய்தார்கள். அந்த அதிசயப் பெண் பற்றி அடுத்து பார்ப்போம்.

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி