முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

ஹஜ் பயணிகளுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஹஜ் பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி உதவியுடன் 2 நாட்கள் நடக்கிறது.

ஹஜ் பயணத்தின் போது சவுதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயண விவரங்கள், ஹஜ் பற்றிய வழி முறைகள், ஹஜ் குழு, ஜித்தாவில் உள்ள இந்திய துணை தூதரக ஏற்பாடுகள் பற்றி முகாமில் விளக்கப்படும்.

28ம் தேதி திங்கள் உருது மொழியில் சென்னை சூளை சட்டண்ண நாயக்கன் தெருவில் உள்ள ஆனைக்கார் மெட்ரிக்குலேஷன் பள்ளி கலையரங்கிலும் 29ம் தேதி தமிழில் சூளை டிமெல்லோஸ் சாலையில் உள்ள ஹஜ் ஹவுசிலும் பயிற்சி முகாம் நடைபெறும்.

இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி