முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 22 ஏப்ரல், 2010

கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா ஷரீஅத் விளக்க மாநாடு

முஸ்லிம் பள்ளிகளில் உருது மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று விருத்தாசலத்தில நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*ஷரீஅத் விளக்க மாநாடு*

கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா ஷரீஅத் விளக்க மாநாடு விருத்தாசலம் நவாப் பள்ளிவாசலில் நடந்தது.

மாநாட்டிற்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

விருத்தாசலம் முத்தவல்லி நவாப் ஜாமிஆ மஸ்ஜித் அப்துல் மஜீது, டவுன் ஜீம்ஆ மஸ்ஜித் சையது முகம்மது, ஷேக் கவுஸ் மியான், அப்துல் ஹமீது, சத்தார் பாஷா, சையது இப்ராஹீம், முகம்மது ஜவ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜமாஅத்துல் கடலூர் மாவட்ட செயலாளர் சபியுல்லாஹ் வரவேற்றார்.

விருத்தாசலம் நகர செயலாளர் முகம்மது சாலிஹ், இஸ்மாயில் நாஜி, முகம்மது இஸ்ஹாக் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்ட தலைவர் நூருல் அமீன் தொடக்க உரையாற்றினார். திண்டுக்கல் யூசுபிய்யா அரபிக்கல்லூரி கலீல் அகமது, மாநில துணைத் தலைவர் சலாஹீத்தீன், மாநில பொதுச்செயலாளர் அப்துல்காதிர், சதீதுத்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய முறைப்படி...

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலமாக முஸ்லிம்களின் உருது பள்ளிகளில் தாய் மொழியான உருதை விருப்ப பாடமாக்கப்படும் போது 2-ம் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. எனவே முஸ்லிம்களின் நலன் கருதி உருது பள்ளியில் உருது மொழியை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்.
*ஆடு, மாடுகளை இஸ்லாமிய முறைப்படி நேரடியாக அறுப்பதை தொடர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
*புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் புனி ஹஜ் கடமையை சரிவர நிறைவேற்றிட, அவர்களுக்கு சட்டங்களை தெளிவாக்கி, கடமை முழுமை பெற விமானத்திற்கு ஒரு ஆலிமை வழிகாட்டியாக அனுப்ப வேண்டும்.
வரதட்சனை வாங்காமல்...

*விருத்தாசலம் பகுதிகளில் பெண்கள் கலைக்கல்லூரி நிறுவ வேண்டும்.

*கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டால் சுமூகமாக பேசி உறவை தொடர வேண்டும். முடியாத பட்சத்தில் கணவன் ஒரே ஒரு தலாக்கை மட்டும் பயன்படுத்தி கணவன்- மனைவி உறவை முறித்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 3 தலாக் விடுவது அல்லாவின் கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே இஸ்லாமியர்கள் இது போன்ற செயல்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.

*அல்லாவின் கட்டளைக்கு ஏற்ப வரதட்சனை வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் முடிப்போம் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

அரசுக்கு நன்றி

*சமீபத்தில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய திருமண பதிவு சட்டத்தில், பள்ளிவாசலில் பதிவு செய்யப் படும் பதிவு நகலை சிறிய மாற்றத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஜமாஅத்துல் உலமா பேரவையின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு இம்மாநாடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் பொருளாளர் அப்துர் ரஜ்ஜாக் நன்றி கூறினார்.


0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி