முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 18 ஜூன், 2009

என்ன கொடுமை இது?

என்ன கொடுமை இது?

நன்றி: சமரசம்

சனி, 13 ஜூன், 2009

இஸ்லாமிய திருமண முறை

முஸ்லிம் தேடும் மனைவி பெண்ணைக் குறித்தும் திருமணத்தைக் குறித்தும் இஸ்லாம் போதிக்கும் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் ஒரு முஸ்லிமை, வெறும் வெளி அலங்காரங்களை மட்டுமே கொண்ட இந்தக் கால இளம் பெண்கள் எவரும் கவர்ந்திட முடியாது. மாறாக, முழுமையான மார்க்கப்பற்றுள்ள பெண்கள்தான் அந்த முஸ்லிமை ஈர்க்க முடியும். ஆகவே, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தம் மண வாழ்வை நிம்மதியானதாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் ஆக்கக்கூடிய இஸ்லாமிய நற்பண்புகள் மிக்க பெண்ணையே அவர் தேர்ந்தெடுப்பார் அதில் நிதானத்தையும் கடைப்பிடிப்பார். கொள்கையற்று வீணான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சி யையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். அதற்கெல்லாம் மேலாக உறுதிமிக்க மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, அழகிய பண்பாடுகளை உடைய பெண்ணைத் தான் முஸ்லிம் தேடுவார். மேலும், இது விஷயத்தில் நபி அவர்களின் வழிகாட்டுதலை கருத்தில் கொள்வார்.
நபி அவர்கள் கூறினார்கள்: "நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக் கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுடையவளையே தேடிப் பெற்றுக் கொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
(வாழ்த்துகிற பொழுது ‘உன் இருகரங்கள் மண்ணாகட்டும், உன் நெற்றி மண்ணாகட்டும்' என்றெல்லாம் நபி அவர்கள் கூறுவார்கள். அதற்கு அதிகமதிகம் அல்லாஹ்விற்குச் சிரம் பணி(ந்து ஸஜ்தா செய்)யட்டும் என்பது பொருளாகும்.)
மார்க்கத்தைப் பேணக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு நபி அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு உபதேசித்தது, அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனென்றால், நபி அவர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கதே என்று கூறியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தமது மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத, கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்காத பெண்ணை மணந்து சிரமத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ளவும் நபி அவர்கள் கட்டளையிட்டார்கள்.
முகீரா இப்னு ஷஃஅபா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி அவர்களின் காலத்தில், நான் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் பேசினேன். நபி அவர்கள் ‘அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?' என்று கேட்டார்கள். நான் ‘இல்லை' என்றேன். அதற்கு நபி அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிக ஏற்றமாக இருக்கும்'' என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸயி)
அன்சாரிப் பெண்ணை மணந்து கொள்ள இருந்த ஒருவர் நபி அவர்களிடம் வந்தார். நபி அவர்கள், அவரிடம் ‘அப்பெண்ணைப் பார்த்தாயா?' என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை' என்றார். ‘அப்பெண்ணைப் பார்த்துக் கொள்!' என அவருக்கு நபி கட்டளையிட்டார்கள். (ஸுனனுன் நஸயி)
ஒரு நல்ல பெண்ணிடம், விரும்பத்தகுந்த ஆன்மிகப் பண்புகளை ஓர் ஆண் எதிர்பார்ப்பது போன்றே அவள் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கையான ஒன்றுதான். இதை நபி அவர்கள் பல ஹதீஸ்களில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்றாக முடியாது.
இதனால்தான் நபி அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்.'' (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
(இந்த இடத்தில், மனைவி தனது கற்பைப் பாதுகாப்பதையே கணவரைப் பாதுகாப்பதென்று நபி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.)
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்களிடம் 'பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?' என கேட்கப்பட்டது. அதற்கு நபி அவர்கள், 'கணவர் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். அவர் ஏவினால் கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவளது ஆன்மாவிலும் அவர் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள்' என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது)
கணவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சி யையும் நற்பாக்கியத்தையும் வழங்க ஆற்றல் பெற்ற மனைவியின் தனித்தன்மையைப் பற்றி நபியவர்களின் உயர்ந்த கண்ணோட்டமாகும் இது. இத்தகைய பெண்ணே இல்லறத்தில் திருப்தி, அமைதி, மன மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வழங்கவும் ஆற்றல் பெற்றவள். அது மட்டுமின்றி பல தலைமுறைகளுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் வீரர்களை உருவாக்குபவராகவும் மேதைகளை உற்பத்தி செய்பவராகவும் விளங்குவாள்.
உடல், உணர்வு, ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற அடிப்படையின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட வேண்டுமென நபி அவர்கள் ஆசைப்பட்டார்கள். அப்போதுதான் திருமண உறவு பலமாக அமைந்து வெறுப்புணர்வும் மனக்கசப்பும் அதை அசைத்து விட முடியாமல் இருக்கும். ஆகவே, எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றும் உண்மை முஸ்லிம் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிடமாட்டார். மாறாக, அவளைவிட்டும் தாமும் விலகி மக்களையும் எச்சரிப்பார்.

வியாழன், 11 ஜூன், 2009

நமது நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் கட்டிடப்பணி

நமது நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் கட்டிடப்பணி காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரி முதல்வர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் இன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பின் நமது ஊர் தலைவர் முஹம்மது யூனுஸ் நானா அவர்களின் முன்னிலையில் நமது நகர ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களுடைய துஆவுடன் துவங்கியது. இன்ஷா அல்லாஹ் இப்பணி முடிந்த பின் இங்கு (மக்தப்) காலை மாலைப் பள்ளி மற்றும் பயான் போன்ற தீன் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஞாயிறு, 7 ஜூன், 2009

இந்திய ஆட்சிப் பணியில் முஸ்லிம்கள்!

இந்திய ஆட்சிப் பணியில் முஸ்லிம்கள்!

Source: சமரசம்

மகளிர் மட்டும்!

மகளிர் மட்டும்!
Source: சமரசம்

ஆட்டிப் படைக்கிறது அறியாமை நோய்!

ஆட்டிப் படைக்கிறது அறியாமை நோய்!



டிப்ளமோ இன் ஸேஃப்டி இன்ஜினியர்

டிப்ளமோ இன் ஸேஃப்டி இன்ஜினியர்

Source: சமரசம்

நகை மதிப்பீட்டாளருக்கு நல்ல வாய்ப்பு!

நகை மதிப்பீட்டாளருக்கு நல்ல வாய்ப்பு!

Source: சமரசம்

பயணம், சுற்றுலாத்துறை படிப்புகள்

பயணம், சுற்றுலாத்துறை படிப்புகள்

Source: சமரசம்

விஷுவல் கம்யூனிகேஷன்

விஷுவல் கம்யூனிகேஷன்

பெற்றோர்களின் சிந்தனைக்கு!

பெற்றோர்களின் சிந்தனைக்கு!


நர்சிங் ஒன்றே சிறந்த வழி!

நர்சிங் ஒன்றே சிறந்த வழி!

Source: சமரசம்

ஆடிட்டர் ஆவது எப்படி?

ஆடிட்டர் ஆவது எப்படி?


Source: சமரசம்

வெற்றிடக் கல்வி

வெற்றிடக் கல்வி

Source: சமரசம்

கடல் சார்ந்த படிப்புகள்

கடல் சார்ந்த படிப்புகள்
Source: சமரசம்

பி.எட் படிப்பு நுழைவுத் தேர்வு

பி.எட் படிப்பு நுழைவுத் தேர்வு

Source: சமரசம்

இஸ்லாமிய ஆய்வில் முதுகலைப் பட்டம்

இஸ்லாமிய ஆய்வில் முதுகலைப் பட்டம்


Source: சமரசம்

தத்தெடுங்கள்....!

தத்தெடுங்கள்....!

Source: சமரசம்

புதன், 3 ஜூன், 2009

பாவங்களின் தாயகம்

பாவங்களின் தாயகம்
--------------------------------------------------------------------------------
பாவங்கில் மிகவும் கொடியது, கிப்ர் என்ற தற்பெருமையே. ஒருவனது உள்ளத்தில் ஓர் அணுவளவேனும் கிப்ர் இருக்கும் வரை அவன் சுவனத்தில் நுழைய முடியாது என்று எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.
யாரும் பெருமையை விரும்ப மாட்டார்கள். அடுத்தவர்களிடத்தில், தன்னைத் தானே பீற்றிக் கொள்பவனை,பெருமை பேசித் திரிபவனை நாம் விரும்புவதில்லை. அடுத்தவர்களைக் குறை கூறுபவனை, மிகுந்த தற்பெருமை கொண்டவனை நாம் வெறுப்போம்.
அதே போல் தன்னைத் தாழ்த்திக் கொள்கிற அடக்கமான, இனிமையான, எளிதில் அணுகிப் பேசக் கூடிய எந்த நபரையும் நமக்குப் பிடிக்கும். நாம் அத்தகையவர்களை மிகவும் விரும்புவோம். பிறருக்கு மரியாதை கொடுப்பவரை, பிறரைக் கண்ணிப்படுத்துகிறவரை நாம் விரும்புவோம்.
நாம் எவ்வாறு பிறரால் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதே மாதிரி நாம பிறரிடம் நடந்து கொண்டால் பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து போகும். பாவங்களின் தாயகமான கிப்ர் என்ற தற்பெருமை குறித்து நாம் கவலையோடு சிந்திப்பதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.
இதற்கு நாம் அதப் என்ற இங்கிதத்திற்கும், அஃலாக் என்ற ஒழுக்கப் பண்புகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் காண்பது நலம் பயக்கும். அதப் ஒருவரது வெளிப்படையான செயல்களைக் குறித்து நிற்கிறது. மாறாக, அஃலாக் நமது உள்ளத்தில் ஊறுகின்ற உணர்வுகளைக் குறித்து நிற்கிறது. இது இஸ்லாம் வடித்துத் தந்த வரையறையாகும்.
நல்ல ஆரோக்கியமான, சராசரி ஆளுமையுள்ள மனிதனிடத்தில் இந்த இங்கிதங்களும், ஒழுக்கப் பண்புகளும் நீக்கமற நிறைந்திருக்கும். ஒழுக்கப் பண்புகள் இல்லாமலேயே ஒருவர் நல்ல இங்கிதங்களைக் கைக் கொள்ளலாம்.
இதில் முதலில் கவனிக்கப்பட வேண்டியது ஒரு மனிதர் பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது. அடுத்து கவனிக்கப்பட வேண்டியது அந்த மனிதர் தனக்குள் என்ன நினைக்கிறார் என்பது. இரண்டு நபர்கள் பிறரிடம் நடந்து கொள்ளும் விதத்தில் அடக்கத்தையும், பணிவையும் காட்டுகிறார்கள். ஆனால் அந்த இரண்டு நபர்களும் எதிரெதிர் எண்ணங்களைக் கொண்டிருக்கலாம்.
ஒருவர் அவரது தாராளத்தன்மையினால் இப்படி பிறரிடம் பணிவாக நடந்திருக்கலாம். இன்னொருவர் அடுத்தவர்களை விட தான் எந்தவிதத்திலும் சிறந்தவர் இல்லை என்ற எண்ணத்தில் இவ்வாறு நடந்திருக்கலாம்.
முதல் நபர் தாழ்மை என்ற தோலைப் போர்த்தியிருக்கிறார். ஆனால் சோதனை என்று வரும் பொழுது அந்தத் தோல் உரிந்து விடும். இரண்டாவது நபரிடம் தான் உண்மையிலேயே பெருமை என்ற அரக்கன் ஒளிந்து இருக்கவில்லை.
பெருமைகள் அனைத்தும் அந்த வல்லோன் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவன் தான் இந்த உலகைப் படைத்தான். அவன் தான் இந்த உலகைப் பரிபாலித்து வரும் நாயன். மனிதப் பிறவிகள் அனைத்தும் அவனது படைப்புகளே. கற்பனைக்கெட்டாத இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மனிதப் படைப்பு ஒரு கொசுவை விட அற்பமே! இந்த உண்மையை உளமாறப் புரிந்து கொண்ட ஒருவன் நாம் அந்த மகா சக்தி படைத்த அல்லாஹ்வின் அடிமை என்பதை உணர்ந்து கொள்வான்.
ஓர் உண்மையான முஸ்லிமுக்கு முன் மாதிரி இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யார் இருக்க முடியும்? அவர்கள் தான் இந்த உலகிலுள்ள மனிதப் படைப்புகளிலேயே மிகச் சிறந்த படைப்பாவார்கள். அவர்கள் தான் அல்லாஹ்வை அடிபணிவதில் இந்த உலகிலேயே முதன்மையானவர்கள்.
அவர்கள் எந்த அளவுக்கு அல்லாஹ்வை அடிபணிந்தார்களோ அந்த அளவுக்கு உயர்ந்து நின்றார்கள். வேறு எந்த மனிதனாலும் அவர்கள் அளவுக்கு அல்லாஹ்வை அடிபணிய முடியாது. அவர்கள் கிப்ர் என்ற தற்பெருமை குறித்து கீழ்க்கண்டவாறு கூறினார்கள் :
கிப்ர் என்பது அறிந்து கொண்டே சத்தியத்தை மறுப்பது, அடுத்தவர்களைக் குறைத்து மதிப்பிடுவது.
இந்த நபிமொழி இரண்டு கொடிய விஷயங்களை நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த இரண்டுமே தனக்குத் தானே முக்கியத்துவம் கொடுக்கும் தன்மையிலிருந்து பிறப்பதாகும்.
முதலாவது, சத்தியத்தை விட தான் முக்கியம் என்ற எண்ணம். இரண்டாவது – பிற மனிதர்களை விட தான் முக்கியம் என்ற எண்ணம்.
அன்றைய அரேபியாவின் குறைஷிகளும், யூதர்களும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை உண்மையான இறைத்தூதர் என்று நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆனால் அவர்களிடமிருந்த பெருமைதான் அவர்களை சத்திய இஸ்லாத்தை ஏற்பதிலிருந்து தடுத்து நிறுத்தியது.
அவர்களில் சிலர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் வாக்களிக்கப்பட்ட இறைத்தூதர் என்று தங்கள் வாய்களாலேயே ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இருந்தும் அவர்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களைக் கண்மூடித்தனமாக எதிர்த்தார்கள்.
இதுதான் பெருமையிலேயே மிகக் கொடிய பெருமையாகும்.
ஆனால் இந்தப் பெருமையின் சிறிய அம்சங்கள் நமது அன்றாட வாழ்விலும் எதிரொலிக்கின்றது. நமது கலந்துரையாடல்களில், விவாதங்களில் நாம் இதகை; காண்கிறோம்.
ஒரு நபருக்கு அவர் பேசுவது தவறு என்று புரியும். இருந்தும் அவர் அதனை விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டிருப்பார். இது அவரிடம் ஒளிந்து இருக்கும் பெருமையால் தான் அல்லாமல் வேறு இல்லை.
அந்த நபர் எவ்வளவு அமைதியானவராக, அடக்கமானவராக இருந்தாலும் இந்தச் சிறிய சோதனை அவருக்குள் இருக்கும் அந்தப் பெருமை என்ற அரக்கனை வெளிக்காட்டிடும். இந்தப் பெருமை என்ற அரக்கன் தான் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதிலுமிருந்தும் ஒரு மனிதனைத் தடுக்கிறது.
இரண்டாவது அம்சம் என்னவெனில் நம்முள் இருக்கும் மேலாதிக்க உணர்வு, பிறரை விட தான் உயர்ந்தவன் என்ற உணர்வு. ஒரு மனிதர் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவரை விட தான் உயர்ந்தவர் என்று எண்ணி விடக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
யார் யாரை விட உயர்ந்தவர் என்பதை அல்லாஹ் ஒருவனே அறிந்தவன். அனைவரும் ஒன்று கூடும் அந்தத் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அதனை அறிவிப்பான். நாம் வெற்றி பெறுவோமா, தோல்வி அடைவோமா என்று யாருக்கும் தெரியாது. இந்த உலகில் ஒரு மனிதர் இருக்கும் இடமே தெரியாமல் இருந்திருப்பார். அவரை யாரும் கண்டு கொள்ளவும் மாட்டார்கள். அந்த மனிதர் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும் அந்த அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
நியாயத் தீர்ப்பு நாளில் அவர் அல்லாஹ்விடம் மிகுந்த கண்ணியத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்பார். இந்த உலகில் மிகுந்த நற்பெயர் வாங்கி நல்ல மனிதராக உலா வந்தவர் அங்கு பாவிகளில் ஒருவராக இருக்கலாம். ஏனெனில் அவர் செய்த பாவகாரியங்கள் அனைத்தும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும்.
இது தான் ஒவ்வொரு மனிதனின் நிலையும். இப்படியிருக்க பிறரை விட தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் ஒரு மனிதனை விட முட்டாள் இருக்க முடியுமா? நமது உடல் ஆரோக்கியம், நமது செல்வங்கள், நமக்கிருக்கும் திறமைகள், நமக்கிருக்கும் அதிகாரங்கள், இவையனைத்தும் அல்லாஹ் நமக்குக் கொடுத்தது. இவை நம்மால் வந்தவையல்ல.
அல்லாஹ் இவைகளை நமக்கு ஒரு சோதனைக்காகக் கொடுத்திருக்கின்றான். அவன் விரும்பினால் இவைகளை அவன் திரும்பப் பெற்றுக் கொள்வான். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் அல்லாஹ்வுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்திக் கொண்டு அடக்கமாக வாழ்வார்கள்.
இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாத குருடர்கள் பெருமை என்ற அரக்கனைத் தங்களுக்குள் வளர்த்துக் கொள்வார்கள்.
கிப்ரின் சில தன்மைகள் வெளியில் தெரியாமல் மறைந்து இருக்கின்றன. ஒருமனிதன் முஸ்லிமல்லாதவர்களின் முன்னிலையில் அல்லாஹ்வுக்குத் தலைவணங்கத் தயங்குவானேயானால், அவனிடம் அல்லாஹ்வின் முன்னிலையிலுள்ள கிப்ர் இரு;கின்றது என்று பொருள் என்று மௌலான அஷ்ரஃப் அலீ தானவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அடக்கம் என்பது தேவைதான். ஆனால் அதுவே தாழ்வுமனப்பான்மையாக மாறி விடக் கூடாது. தாழ்வுமனப்பான்மை என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் ஆட்லர் (1870-1937).
வாழ்க்கை என்பது ஒரு போராட்டக் களம். அதில் தாழ்மையான ஒரு நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு தன்னை அழைத்துச் செல்ல போராடுகின்றான் மனிதன். இந்தப் போராட்டத்தில் யார் தோல்வி அடைகின்றாரோ அவர் தன்னுள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்.
தாழ்வுமனப்பான்மையை ஒரு முஸ்லிம் விட்டொழிக்க வேண்டும். மாறாக, தன்னை அல்லாஹ்வின் அடியான் என்ற வகையில் தாழ்த்திக் கொண்டு, அடக்கமாக நடந்து கொள்வதே ஒரு முஸ்லிமுக்கு அழகு
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி