முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

புதன், 30 செப்டம்பர், 2009

உலமா நலவாரியம் அமைத்த முதல்வர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்க உலமா பெருமக்கள், மஹல்லா ஜமாஅத்தினர் திரண்டுவர பேராசிரியர் வேண்டுகோள்!

வரும் அக்டோபர் 4-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவில், உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பும், முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கைக் குரிய உலமா பெருமக்களும், பள்ளிவாசல், மத்ரஸா, தர்கா பணியாளர்களும், மஹல்லா ஜமாஅத்தினரும் திரண்டுவர பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அழைப்பில் தெரிவித்துள்ளதாவது:

வரும் அக்டோபர் 4-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் மறைந்த பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துல் சமது சாஹிபின் 84-வது பிறந்த தின விழா-சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவாகவும், உலமாக்கள்-பணியாளர்கள் நலவாரியம் அமைத்துத்தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளது.

இந்த இனிய விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி விழா பேருரை நிகழ்த்திட உள்ளார்.

தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கமும்-மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) காலந்தொட்டு நம் உயரிய கலாச்சாரத் தன்மையை நிலை நாட்டுவதில் பெரும் பங்காற்றி வருவது கண்கூடாகும்.

அதன் அடிப்படையில் ஜனநாயக அரசியலில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பெறுவதில் நாம் கையாண்ட அணுகுமுறைகள் மிகப் பெரிய வெற்றியைத் தந்துள்ளன.

மேலும், சிறுபான்மையினர் நல ஆணையம், சிறு பான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழக வக்ஃபு வாரியம், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி ஆகியவற்றின் செயல்பாடுகளை ஊக்குவித்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் நாம் எடுத்துரைத்த கோரிக்கைகளை தமிழக அரசு செவிமடுத்து நம்பிக்கை தரும் வகையில் செயல்பட்டு வருகின்றது.

மேலும் மணிவிழா மாநில மாநாட்டில் நாம் வைத்த கோரிக்கைகளை ஏற்று முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ததும், உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்துத் தந்ததும் செயற்கூறிய செயல்களாகும்.

மேலும் உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்திட மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை அழைத்து மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டினை நாம் நடத்தினோம். அதன் பலனாக அரசியல் கலப்படமற்ற-முழுக்க முழுக்க உலமாக்கள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட-அதிலும் மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்துப் பெருமைபடுத்தியுள்ளது சிறப்புக்குரியதாகும்.

மேலும் சென்ற வாரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உலமாக்கள்-பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களை முறையாக சேர்க்கும் பணியை துணை முதல்வர் அவர்கள் விரைவு படுத்திட நடவடிக்கை எடுத்துள்ளது நினைவில் கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் நன்றி சொல்லும் முகமாகவும், மேலும் நம் உரிமைகளைப் பெற வேண்டியும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறவுள்ள விழா அமைந்திட வேண்டும்.

இதற்காக இம்மாநாட்டில் சங்கைமிகு உலமாக்கள், பள்ளிவாசல் இமாம்கள், மதரஸா பேராசிரியர்கள், பள்ளிவாசல் தர்கா பணியாளர்கள், மஹல்லா ஜமாஅத்தினர் பெருமளவில் பங்கு கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கண்ணியத்திற்குரிய ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகளும், பள்ளிவாசல்-மதரஸா நிர்வாகிகளும், ஜமாஅத் தலைவர்களும், சங்கைமிகு உலமாக்களும் பெருமளவில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்து முழு ஒத்துழைப்பை தருவதோடு வரும் 2-ம் தேதி ஜும்ஆவின் போது இது பற்றிய அறிவிப்பையும் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

முஸ்லிமாக மாறினர் 600 சீனர்கள்

திங்கள், 28 செப்டம்பர், 2009

மிகச் சிறந்த இலக்கியம்


பண்பியல் பாடநூல்கள்

அறிஞர் அண்ணா கண்ட இஸ்லாம்



உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

தேவை - இஸ்லாமியக் குற்றவியல் சட்டம்...!


வருகிறது மத்திய அரசின் மதரஸா நலவாரியம்



உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சீத்தாராமன் தகவல்

உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சீத்தாரமன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

2009, 10ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் பேரில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நல வாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற்படாத பணியாளர்கள் பதிவு பெற தகுதியுடையவர்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் நிதி உதவிகள் யாவும் தகுதியான நபர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.

வேறு நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும்தான் நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர் ஆவார்.

எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் உரிய படிவத்தில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி நெ.512, காந்திரோடு, என்ற முகவரியில் அமைந்துள்ள வக்பு வாரிய கண்காணிப்பாளரிடம் விண்ணப்பித்து உறுப்பினர்களாக சேர்ந்து, அரசு உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹஜ் பயணிகளுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஹஜ் பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி உதவியுடன் 2 நாட்கள் நடக்கிறது.

ஹஜ் பயணத்தின் போது சவுதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயண விவரங்கள், ஹஜ் பற்றிய வழி முறைகள், ஹஜ் குழு, ஜித்தாவில் உள்ள இந்திய துணை தூதரக ஏற்பாடுகள் பற்றி முகாமில் விளக்கப்படும்.

28ம் தேதி திங்கள் உருது மொழியில் சென்னை சூளை சட்டண்ண நாயக்கன் தெருவில் உள்ள ஆனைக்கார் மெட்ரிக்குலேஷன் பள்ளி கலையரங்கிலும் 29ம் தேதி தமிழில் சூளை டிமெல்லோஸ் சாலையில் உள்ள ஹஜ் ஹவுசிலும் பயிற்சி முகாம் நடைபெறும்.

இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்ணல் நபிகளார் வாழ்வினிலே....

வேண்டாம் கஞ்சத்தனம்

புதன், 23 செப்டம்பர், 2009

திங்கள், 21 செப்டம்பர், 2009

அருளான ஆறு நோன்புகள்

நன்றி: K-Tic பிறை செய்தி மடல், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

யாருக்குப் பெருநாள்?

நன்றி: K-Tic பிறை செய்தி மடல், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இன்னும் காலம் கடந்து விடவில்லை!

பெருநாள் அளித்த பெருமானார் (ஸல்)

பெருமையும், உரிமையும்

எல்லாரும் கொண்டாடுவோம்!

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ஆண்டு முழுவதும் ரமளான் ஆகாதா?

ஈத் முபாரக்


சனி, 19 செப்டம்பர், 2009

ஈகைத் திருநாள் சிறப்பு




வெள்ளி, 18 செப்டம்பர், 2009

ரமழான் : நம்மைக் குறித்தே மதிப்பிட நல்ல தருணம்...!


புதன், 16 செப்டம்பர், 2009

உலமாக்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாராட்டு


ரமழான் சிந்தனைகள்

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

ரமழான் சிந்தனைகள்

திங்கள், 14 செப்டம்பர், 2009

ரமழான் சிந்தனைகள்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

ரமழான் சிந்தனைகள்

சனி, 12 செப்டம்பர், 2009

ரமழான் சிந்தனைகள்

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

வியாழன், 10 செப்டம்பர், 2009

வஹியின் வாசல் திறந்த வசந்த இரவு...


அருள் தரும் ரமழான்

ரமழான் சிந்தனைகள்

லைலத்துல் கத்ர் & ஸதக்கதுல் ஃபித்ர்



நன்றி: K-Tic பிறை செய்தி மடல், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

புதன், 9 செப்டம்பர், 2009

இஃதிகாFப் இருப்போம்! லைலத்துல் கத்ரை அடைவோம்!!


இஃதிகாFப் - 4





Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி