முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

சனி, 2 மே, 2009

கோடை கால தீனிய்யாத் பாட வகுப்பு ஆலோசனைக் கூட்டம்

கோடை கால தீனிய்யாத் பாட வகுப்பு ஆலோசனைக் கூட்டம்நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் மாணவர்களுக்கான கோடை கால தீனிய்யாத் வகுப்பு பற்றி ஆலோசனைக் கூட்டம் நேற்று நகர ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்கள் தலைமையில் இரவு 8.30 மணியளவில் நடைபெற்றது. ஹாபிஸ் யூசுப் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார். துவக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து போதிலும் சமுதாய சேவையில் ஆர்வத்துடன் பங்கு கொள்ளும் நமது ஜமாஅத்துல் உலமா கௌரவ ஆலோசகர் மௌலானா அ.ப. கலீல் அஹ்மத் அவர்களுக்கு ஜமாஅத்துல் உலமா பேரவையின் செயல்பாடுகளை துள்ளியமாக ஆய்வு செய்து தானாகவே முன்வந்து குவைத் வாழ் தமிழ் மக்களின் சார்பாக ஜமாஅத்துல் உலமாவை ஆர்வமூட்டும் வகையில் கணிசமான தொகை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு துஆ செய்யப்பட்டது . அதன் பின் நமது மக்தப் மாணவர்களின் கோடை கால தீனிய்யாத் வகுப்பின் தேர்வை வரும் ஏப்ரல்13ம் தேதி நடத்துவது என்றும் மற்றும் போட்டி இன்னும் மக்தப் ஆண்டு விழாவை ஏப்ரல் 17.18ல் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பு: கோடை கால தீனிய்யாத் போட்டிகளில் பங்கு கொள்ள நாடுபவர்கள் உடனே அதற்கான விண்ணப்ப படிவத்தை அனைத்து பள்ளி இமாம்களிடமும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மார்க்கப்பற்றுள்ளவர்களாக வளர்க்க இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி