முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 15 ஜூலை, 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'மாபெரும் இஸ்ரா / மிஃராஜ்' சிறப்பு நிகழ்ச்சிகள் 'அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!' என்ற கருப்பொருளில் கீழ்க்கண்ட முறையில் நான்கு இடங்களில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றன. அல்ஹம்து லில்லாஹ்...

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாபெரும் விண்ணுலக யாத்திரையின் நினைவாக நடத்தப்பட்டன.

முதல் நிகழ்ச்சி:



08.07.2010 வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... இளவல் எம்.என்.அப்துல் பாஸித் கிராஅத் ஓதினார். சங்கத்தின் துணைத் தலைவர்கள் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ மற்றும் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ ஆகியோர் இஸ்ரா, மிஃராஜ் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா குறித்த முழுமையான வரலாறு ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இரண்டாவது நிகழ்ச்சி:

09.07.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... இளவல் எம்.என். அப்துல் லத்தீஃப் கிராஅத் ஓதினார். சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி மற்றும் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் ஆகியோர் இஸ்ரா, மிஃராஜ் நிகழ்வின் அன்பளிப்பு, இஸ்லாமியர்களின் கடமைகள் ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன் நன்றியுரையாற்றினார்.

மூன்றாவது மற்றும் நான்காவது நிகழ்ச்சிகள்:

09.07.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கீழ்க்ண்ட இரண்டு பள்ளிவாசல்களில் இஸ்ரா ஃ மிஃராஜ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைக்கா ஸபீக்கா' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ சிறப்புறையாற்றினார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக 200 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள 'அல்-அன்பயீ' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ சிறப்புறையாற்றினார்.

கடந்த ஓராண்டாக இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட நான்கு நிகழ்ச்சிகளிலும் சமீபத்தில் மரணமடைந்த இலங்கையைச் சேர்ந்த மாபெரும் அறிஞர் மவ்லானா நியாஜ் மவ்லவீ அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு அவர்களின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.

குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்களும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. விண்ணப்பப் படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டது.

மேலதிக விபரங்களுக்கு... துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82 - அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com - மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com - யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி