முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும், பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும், அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும், பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

வெள்ளி, 5 ஜூன், 2015
9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா! (படங்கள்)
பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் முஹம்மது முபாரக் அலி (மேலப்பாளைம்), உமர் ஃபாருக் (பொதக்குடி) மற்றும் முஹம்மது அஷ்ரஃப் அலி (கடலூர்) ஆகிய மூன்று மாணவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்கள், தங்க பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ், ஜக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகளான எஸ். அலி அக்பர் மற்றும் ஜி.எம். நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துஸ்மது ரஸாதி கிராஅத் ஓதி துவக்கி வைத்தர்.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன ஆண்டறிக்கை வாசிக்கபடப்டது. மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களை வாழ்த்தி ஆலிம் பெருமக்கள் உரையாற்றினார்கள்.
விழா நிகழ்வை எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் கலிமா பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழச்சிக்கு வெளியூரிலிந்து மதரஸா மாணவர்களின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டடிருந்தது.
படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி
பதிவர்
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
இந்த நேரத்துல
11:10:00 பிற்பகல்
0
படிச்சவங்க சொன்னது
இதனுடன் தொடர்புடையது


9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா! (படங்கள்)
பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் முஹம்மது முபாரக் அலி (மேலப்பாளைம்), உமர் ஃபாருக் (பொதக்குடி) மற்றும் முஹம்மது அஷ்ரஃப் அலி (கடலூர்) ஆகிய மூன்று மாணவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்கள், தங்க பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ், ஜக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகளான எஸ். அலி அக்பர் மற்றும் ஜி.எம். நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துஸ்மது ரஸாதி கிராஅத் ஓதி துவக்கி வைத்தர்.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன ஆண்டறிக்கை வாசிக்கபடப்டது. மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களை வாழ்த்தி ஆலிம் பெருமக்கள் உரையாற்றினார்கள்.
விழா நிகழ்வை எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் கலிமா பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழச்சிக்கு வெளியூரிலிந்து மதரஸா மாணவர்களின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டடிருந்தது.
படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி
பதிவர்
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
இந்த நேரத்துல
11:09:00 பிற்பகல்
0
படிச்சவங்க சொன்னது
இதனுடன் தொடர்புடையது


திங்கள், 1 ஜூன், 2015
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 71வது பட்டமளிப்பு விழா (படங்கள்)
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 152ம் ஆண்டு விழா 71வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
ஜாமிஆ தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் ஜாமிஆ செயலாளர் அப்துல் சமது வரவேற்றார்.
வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி முன்னாள் முதல்வர் அல்லாமா ஜைனுல் ஆபீதீன் ஹள்ரத், சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத், ஆயங்குடி மவுலவி ஜாபர் அலி ஹள்ரத், ஜாமிஆ பேராசிரியர் அப்துஸ் ஸமது ஹள்ரத், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தவ்ரத்துல் ஹதீஸ் மவ்லவி ஃபாஜில், மவ்லவி ஆலிம், ஹாஃபிழ் ஆகியோருக்கு ஜாமிஆ முதல்வர் மவுலவி நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். ஜாமிஆ பொருளாளர் சார்பில் காசிம் ஹள்ரத் நன்றி கூரினார்.
இறுதியாக ஜாமிஆ மூத்த பேராசிரியர் மவுலவி அப்துர் ரப் ஹள்ரத் துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
நன்றி: லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
பதிவர்
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
இந்த நேரத்துல
12:45:00 முற்பகல்
0
படிச்சவங்க சொன்னது
இதனுடன் தொடர்புடையது


இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)