முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும், பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும், அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும், பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
புதன், 22 ஏப்ரல், 2015
சிதம்பரத்தில் மாபெரும் மாநில மாநாடு; தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு
வரும் ஏப்ரல் 25 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை சிதம்பரத்தில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மாநில மீலாது மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மாநில மீலாது மாநாடு
இடம்: ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரழி) நினைவரங்கம், ஈத்கா திடல், சிதம்பரம், கடலூர் மாவட்டம்
நாள்: 25.04.2015 சனிக்கிழமை இன்ஷா அல்லாஹ்....
சமூக நல்லிணக்க அரங்கம் - நேரம்: காலை 9:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை
ஆய்வரங்கம் - நேரம்: பகல் 3:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை
ஷரீஅத் அரங்கம் - நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:30 மணி வரை
சிறப்பு அமர்வுகள் - இடம்: M.Y.M. ஃபைஸல் மஹால், சிதம்பரம்
மகளிர் அரங்கம் (பெண்களுக்கு மட்டும்) - நாள்: 24.04.2015 வெள்ளிக்கிழமை - நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
ஆலிம்கள் அரங்கம் (ஆலிம்களுக்கு மட்டும்) - நாள்: 25.04.2015 சனிக்கிழமை - நேரம்: பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
தமிழகத்தின் தலை சிறந்த மதிப்பிற்குரிய ஆலிம் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றுகின்றனர்.
அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!
அதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.
புகைப்படங்கள் உதவி: லால்பேட்டை இணையதளங்கள்
இப்படித்தான் தேடனும்
2015,
சிதம்பரம்,
சீரத்,
மாநாடு,
மீலாது,
ஜமாஅத்துல் உலமா,
ஸீரா,
Chidambaram,
Jamathul Ulama,
Seera
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)