முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

ரமழான் சிந்தனைகள்

உலமாக்கள் நல வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமனம்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 2009, பிப்ரவரி 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை நடத்தியது.

தமிழகம் முழுவதிலுமிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்கள், இமாம்கள், பள்ளிவாசல் தர்ஹா பணியாளர்கள், ஜமாஅத் தலைவர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற இம்மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இம்மாநாட்டில் பிரதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இக்கோரிக்கை முதல்வர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற உறுதுணையாக இருப்பேன் என அம்மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2009-2010ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மத்ரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்காணும் அறிவிப்பின்படி தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இந்நலவாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம்.

இவ்வாறான நிறுவனங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற்படாத பணியாளர்கள் பதிவு பெற தகுதியுடையவர்கள் என அரசு ஆணையிடுகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு சுற்று சூழல் மற்றும் வக்ஃபு அமைச்சர் மைதீன் கான் தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்.

இவ்வாரியத்தில் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகக் கீழ்க்கண்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

  • அரசு சார்ந்த உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அரசு நலத்துறை செயலாளர்,
  • நிதித்துறை முதன்மைச் செயலாளர்,
  • வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர்,
  • சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்,
  • பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்,
  • உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்,
  • தொழிலாளர் நலத் துறை ஆணையாளர்,
  • சிறுபான்மை நலன் ஆணையர்,
  • பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையர்,
  • தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர்

ஆகியோர் அரச சார்ந்த உறுப்பினர்களாகவும்,

அலுவல் சாரா உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

  • தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான்,
  • மாநில பொதுச் செயலாளரும் மவ்லவீ அப்துல் காதர்,
  • மாநில பொருளாளர் மௌலவி எஸ்.எம். முஹம்மது தாஹா,
  • மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவரும் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ,
  • திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அல்ஹசனாத்துல் ஜாரியா அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி டி.ஜே.எம். சலாஹுத்தீன்,
  • வேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் வாணியம்பாடி மஃதினுல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வருமான மௌலவி முஹம்மது வலியுல்லாஹ்,
  • மாநில துணைப் பொதுச் செயலாளரும் பாபநாசம் ஆர்.டி.பி. காலேஜ் அரபித் துறை பேராசிரியருமான மௌலவி தேங்கை ஷர்புத்தின்,
  • சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமாமான மௌலவி ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ்,
  • மாநில தகவல் தொடர்பு நிறுவனர் சிதம்பரம் மௌலவி முஹம்மது இஸ்மாயில் நாஜி,
  • குடியாத்தம் தாருல் உலூம் சயீதிய்யா அரபிக் கல்லூரி நிறுவனர் மௌலவி முஹம்மது அய்யூப்,
  • தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி எஸ். முஜீபுர் ரஹ்மான்,
  • தமிழ்நாடு பிலால்கள் சங்கம் தலைவர் ஏ. முஹம்மது யூனுஸ்,
  • தமிழ்நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடல் உழைப்பு பிலால்கள் நல சங்கம் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அலி பேக்,
  • தமிழ் மாநில இமாம்கள் பேரவை மௌலவி எம்.ஜி. ஷிஹாபுத்தீன்,
  • சென்னை மந்தைவெளி தலைமை இமாம் மௌலவி ஜி.கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி

ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அரசு செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணித்து இப்பிரிவினரின் மேம்பாட்டினை உறுதி செய்ய தக்க ஆலோசனைகளை இவ்வாரியம் அரசுக்கு வழங்கும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களைச் சேர்த்து வாரிய உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவுச் செய்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உதவி தொகைகள் வழங்குவதற்கான வழி முறைகள் குறித்து அரசு கீழ்க்கண்டவாறு ஆணையிடகிறது.

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கீழ்க்கண்ட பல்வேறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்த கொள்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்கப்படும்:

விபத்து ஈட்டுறுதி திட்டம்

  • விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சம் உதவித் தொகை.
  • விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை.
  • இயற்கை மரணத்திற்குள்ளானவர் குடும்பத்திற்கு உதவித் தொகை ரூ. 15 ஆயிரம்.

கல்வி உதவித் தொகை

  • 10-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
  • 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய்,
  • 11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
  • 12-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ. 1,500,
  • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ. 1,500,
  • முறையான பட்டப் படிப்புக்கு ரூ. 1,500,
  • மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப் படிப்புக்கு ரூ. 1,750,
  • முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ. 2 ஆயிரம்,
  • மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ. 3 ஆயிரம்.
  • தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ. 2 ஆயிரம்,
  • மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்டப்படிப்புக்கு ரூ. 4 ஆயிரம்,
  • தொழிற் கல்வி மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம்,
  • மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு ரூ. 6 ஆயிரம்,
  • ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்புக்கு ரூ.1,000,
  • மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ. அல்லது பல்தொழில் பயிற்சி படிப்புக்கு 1,200,

திருமண உதவித் தொகை ரூ.2 ஆயிரம்.

மருத்துவ உதவித் தொகை

  • மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் 6000 ரூபாய்,
  • கருச்சிதைவு, கருக்கலைப்பு ரூ.3000,
  • மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.400.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்-செயலராக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலர் நியமனம் செய்யப்படுகிறார்.

18 வயது முடிவடைந்த, அனால் 60 வயது முடிவடையாத ஒவ்வொருவரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்றவராவார்.

தற்போது நடை முறையில் உள்ள உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந் நலவாரியத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படக்கூடாது.

உறுப்பினர் பதவிக்குரிய விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த நபருக்கு வழங்கி அவர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களைத் தொகுத்து, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வக்ஃபு காண்காணிப்பாளர்கள் / வக்ஃபு ஆய்வாளர்களின் உதவியுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் வாங்குவார்.

நிதி உதவி வழங்கக் கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான உறுப்பினர்களுக்கு நல உதவிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் வழங்கப்படும்.

வாரிய உறுப்பினர் சேர்க்கைக்குரிய விண்ணப்ப படிவம், வாரியத்தின் விதிமுறைகள், வாரியத்தின் இதர செயல்பாடுகள் முதலிய அனைத்திற்கும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்படும் இதர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான நிதி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் நிதியிலிருந்து வழங்கப்படும்.

மேற்காணும் நிதி உதவிகள் யாவும் தகுதியான நபர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.

அரசு / அரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அந்நிறவனங்களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்களை பெற இயலாது.

வேறு நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும்தான் நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர் ஆவார்.

மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் மாவட்டங்களில் சீராக நடைபெறுவதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் மாநில அளவில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகிறது. சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, நல உதவிகள் இனம் வாரியாக வழங்கப்பட்ட எண்ணிக்கை மற்றும் தொகை, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையினை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அரசுக்கு அனுப்பி வைக்குமறு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

புதியதாகத் தோற்றுவிக்கப்படும் இந்நலவாரியத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கவும், மேலும் புதிய திட்டங்கள் அமுல் படுத்தப்படுவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கவும், மற்றும் இக்குழுவினை முதல் நிலைக் குழுவாகவும் (தினப்படி / பயணப்படி பெறுவதற்கு), இதன் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயித்து, அரசு ஆணை வெளியிடுகிறது.

மேற்குறிப்பிட்டவாறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காகவும், இதுதொடர்பான பிற பணிகளை மேற்கொள்வதற்காகவும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தகவல்: தமிழ்நாடு மாநில இ.யூ. முஸ்லிம் லீக்

அண்ணல் நபிகளார் வாழ்வினிலே...

ரம்ஜான் சிந்தனைகள்

அருள் தரும் ரமழான்

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

ரமழான் சிந்தனைகள்


Thanks: Dinamalar

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றிதழ் ஹஜ் பயணிகள் சமர்ப்பிக்க உத்தரவு


Source: Dinamalar

நோன்பின் பரிந்துரை


Source: Dinathanthi

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

இரவு தொழுகை

இரவு தொழுகை - முஹம்மது அப்பாஸ்
'13 ரக்அத்கள்'

நபி (ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி (ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்' (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், புகாரி 183 & முஸ்லிம் 1400)

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), முஸ்லிம் 1402)

நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் வித்ரு தொழுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதுமையடைந்து பலவீனப்பட்டபோது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். (அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), திர்மிதீ 420 & நஸயீ 1708)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறு ரக்அத்களிலும் உட்கார மாட்டார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள், முஸ்லிம் 1341, திர்மிதீ 421, அபூதாவூத் 1141 & தாரமீ 1535)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் உள்பட பதிமூன்று ரக்அத்கள் (இரவில்) தொழுவார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள், முஸ்லிம் 1342)

மேற்கண்ட எந்த வாசகத்திலும் ரமலான் என்ற வாசகம் இடம் பெறவில்லை என்பதை சகோதரர்கள் நன்கு படித்து பார்க்கவும்.

இங்கு நடைப் பெறக்கூடிய தலைப்பு ரமலானில் நடைப்பெறும் தராவிஹ் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

ரமலான் என்று 8 - 3 வரும் ஒரு சில ஹதிஸ்களும் பலஹீனமானது, அதையும் 8 - 3 பள்ளியில் ஜமாத்தாக தொழுகும் சகோதரர்கள் நன்கு படித்து பார்க்கவும்.

11 அல்லது 13 ரக்கத்து பள்ளியில் ரமலானில் ஜமாத்தாக தொழுகுவதற்கு எந்த ஒரு ஆதரபூர்வமான செய்தி கிடையாது.

இன்று சில சகோதரர்கள் ரமலானில் 8 மற்றும் 3 ரக்கத்து வித்ரு ஜமாத்தாக தொழுகுகிறார்கள், இதற்கான ஆதாரமாக கீழ்கண்ட ஆதாரத்தை எடுத்து வைக்கிறார்கள்.

20 ரக்கத்து சரியா அல்லது தவறா எனபது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அதைப்பற்றி அதன் ஹதிஸ் நிலை மற்றும் மிகப் பெரிய மார்க்க அறிஞர்கள் விளக்கம் என்ன என்பதை பிறகு பார்ப்போம்.

20 ரக்கத்தின் நிலமையை பலகினமானது என்று குறள் கொடுக்கும் சிலர் 8+3 ரக்கத்தில் வரும் அறிவிப்பளார்களின் நிலைமையையும் கட்டாய தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அவர்கள் 30 நாள் பள்ளியில் ஜமாத்தாக நபி (ஸல்) அவர்கள் தொழுததாக ஆதராத்தையும் முன் வைக்க வேண்டும்.

எதற்கெடுத்தாலும் கீழ்க் கண்ட ஹதிஸை எடுத்து வைக்கும் சிலர்(என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாதாக சொல்லி 30 நாள் ஜமாத்தாக தொழுது வருகின்றார்ர்கள்.

நபி(ஸல்) அவர்கள் ரமலானில் பள்ளியில் கூட்டாக 30 நாள் இரவு தொழுகை நடத்தி காட்டினார்கள் என்று ஒரு பலகினமான ஹதிஸ் கூட இவர்களால் எடுத்து வைக்கும் முடியாது, ஸஹாபாக்களை பின் பற்ற மாட்டோம் சொல்லும் சகோதரர்கள் இந்த ஒரு விசயத்தில் மட்டும் ஸஹாபாக்களை பின் பற்ற காரணம் என்ன?

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

1) ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ரமலானில் 8 ரக்கத்துகளும் வித்ரு 3 ரகஅத்துகளும் தொழவைத்ததாக அறிவிக்கிறார்கள். (அபுதாவுத் & நஸயி).

இது இந்த இரண்டும் நூல்களில் இடம் பெறும் இந்த ஹதிஸ் முன்கர், சாத், மத்ருக் தரத்தில் அமைந்த ஹதிஸ் ஆகும் என இமாம் அபுதாவுத் (ரஹ்), இமாம் நஸயி (ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்தததை மறுக்கும் சகோதரர்கள் மறைத்து தாங்கள் முழுமையாக ஸஹிஹ்வான ஹதிஸ் பின்பற்றும் என்று அறியாத மக்களை மூடராக்கி கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்களின் நிலைமை.

இமாம் அபுதாவுத் (ரஹ்), இமாம் நஸயி (ரஹ்) இதில் வரும் அறிவிப்பாளர் ஈஸா பின் சாரியா யாரென அறியப்படாதவர்.

எனவே இந்த ஹதிஸ் ஏற்க தக்கதல்ல என விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதில் வரும் மற்றொரு அறிவிப்பாளர் முகம்மது பின் ஹூமைத் அர் ரஜி ஒரு பொய்யர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

2) மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஃபு (ரலி), தமிமுத்தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக்கத்து தொழவைக்கும் படி கட்டளையிட்டார்கள் (மாலிக் முஅத்தா).

இது நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக வரவில்லையே, உமர்(ரலி) அவர்கள் அறிவித்தாக வருகின்றது, நபி(ஸல்) அவர்களை பின்பற்றிற்களா? அல்லது உமர் (ரலி) அவர்களை பின்பற்றிற்களே?

மேற்கண்ட ஹதிஸ் அவர்கள் கூற்றுபடி உமர் (ரலி) பின்பற்றுவதை ஏற்று கொள்வதாக என்று வைத்து கொண்டாலும் 23 ரக்கத்து என்பதை கீழ்கண்ட தொடர் மூலம் அறியலாம்.

ஸாயப் பின் யாஜித் அவர்களின் வழியாக இந்த ஹதிஸ் அறிவிக்கப்படுகின்றது, இவர் அறிவிப்பு செய்யும் வரிசையில் 11, 13, 20 ரக்கத்துகள் இடம் பெறுவதால் மார்க்க அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடு இருக்கின்றது.

அவற்றின் தொடரை விரிவாக பார்த்தால் உன்மை நிலையை நாம் கண்டறியலாம், ஸாயிப் பின் யாஜித் அவர்களிடமிருந்து 3 பேர் ஹதிஸை அறிவிக்கிறார்கள்.

1) ஹரித் பின் அப்துர் ரஹ்மான்

2) யாஜித் பின் குஷைபா
3) முகம்மது பின் யூசுப்

இதில் 1) ஹரித் பின் அப்துர் ரஹ்மான் மற்றும் 2) யாஜித் பின் குஷைபா இந்த இரண்டு பேரும் 20 ரக்கத்து என அதே ஹதிஸில் குறிப்பிடுக்கின்றார்கள், மேலும் யாஜித் பின் குஷைபா அவர்களிடத்தில் இரண்டு மாணவர்களும் ஸாயிப் பின் யாஜித் அவர்களிடத்தில் 20 ரக்கத்து என அறிவிப்பு செய்கிறார்கள்.

யாஜித் பின் குஷைபா 1) இப்னு அபிதைப் 2) முகம்மது பின் ஜாபர் ஆகிய இருவரும் 20 ரக்கத்து என ஸாயிப் பின் யாஜித் அவர்களிடத்தில் அறிவிப்பு செய்கிறார்கள்.

இப்போது கருத்து வேறுபாடு முகம்மது பின் யூசுப் அவர்களிடத்தில் வருகிறது.

முகம்மது பின் யூசுப் அவர்களிடத்தில் மூன்று மாணவர்கள் இடம் பெறுகின்றார்கள்.

1) இப்னு இசாக் 2) தாவுத் பின் கைஸ் 3) இமாம் மாலிக் இதில் இப்னு இசாக் 13 ரக்கத்தும், இமாம் மாலிக் 11 ரக்கத்தும், தாவுத் பின் கைஸ் 21 ரக்கத்து அறிவிப்பு செய்கிறார்கள்.

இதில் மூன்று பேர் அறிவிக்கும் ஹதிஸ் வெவ்வேறாக வருவதால் இது முள்தரப் வகையை சார்ந்தது, அதாவது அறிவிப்பாளர் விசய்த்திலோ அல்லது அறிவிக்கப்படும் செய்திகளிலோ குழப்பம் இருத்தல், இது போன்ற ஹதிஸ் ஏற்கத்தக்கதல்ல, எனவே இதுவும் பலவினமடைகிறது.

மேலும் 1) ஹரித் பின் அப்துர் ரஹ்மான் 2) யாஜித் பின் குஷைபா இந்த இரண்டு பேர் வழியாக வரும் ஹதிஸில் எந்த வித குழப்பமும் இல்லை, அறிவிக்கும் நபர்கள் பற்றி யாரும் விமர்சனம் செய்யப்படவில்லை, இதன் தொடர் மிகவும் அழகானதாகும், எனவே இந்த ஹதிஸ் ஸஹிஹ் தரத்தில் அமைந்தவையாகும், எனவே 20 ரக்கத்து என்பது பலமாக இங்கு நிருபிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் 3 நாட்கள் மட்டும் தொழுகை நடத்தினார்கள்:

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்ட, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். 'நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி)

எந்த எந்த நாட்கள்:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் நோன்பு இருந்தோம், அம்மாத்தத்தில் ஏழு நாட்கள் எஞ்சி இருக்கும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. அவ்விரவில் (24ம் இரவில்) மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். ஆறு நாட்கள் மீதம் இருக்கும் போது (25ம் இரவில்)எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. ஐந்து நாட்கள் மீதம் இருக்கும் போது(26ம் இரவில்) பாதி இரவு கழிவும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், அப்போது நாங்கள் அல்லாவின் தூதரே! அவ்விரவில் மீதமுள்ள நேரத்தில் எங்களுக்கு உபரியான வணக்கத்தை நடத்தலாமே? என்றோம், அதற்கவர்கள் யார் இமாம் தொழுகையை முடிக்கும் வரை இமாமுடன் தொழுகிறாரோ அவர் பாதி இரவு வணங்கியதாக பதிவு செய்யப்படுகினறது. என்று கூறினார்கள் மீதமிருக்கும் போது(27ம் இரவில்) எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், தம் குடும்பத்தினரயும் மனைவிமாரையும் அழைத்தார்கள் வெற்றி எங்களுக்கு அஞ்சுமளவுக்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், என அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அப்போது வெற்றி என்பது என்ன? என்று கேட்டேன் அதற்கவர் ஸஹர் செய்தல் என விடையளித்தார்கள். இதை ஜுபைர் பின் நுபைர் அறிவிக்கிறார்கள்(நஸயி, இப்னுமஜா, திர்மதி, அஹ்மத், தாரிமி & அபுதாவுத்)

எவ்வாறு என்னை தொழுகை கண்டீர்களோ அதுபோல தொழுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், எனவே, மறுக்கும் சகோதரர் 23ம், 25ம், 27ம் இரவில் மட்டும் கூட்டாக தொழ வேண்டும.

அப்படி இல்லை என்றால் 30 நாட்கள் பள்ளியில் ஜமாத்தாக தொழுகை நடத்தினார்கள் என ஆதரத்தை நிருபிக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இரவு தொழுகையை சகபாக்கள் எப்படி தொழுதார்கள்:

ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி).

ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும் இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ர லி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது!' என்று இமாம் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார் (புகாரி).

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபி (ஸல்) மரணிக்கும் வரை மக்கள் தனிதனியாகவே தொழுது வந்தனர், எனவே மறுக்கும் சகோதரர்கள் தனிதனியே தொழ வேண்டும்,

உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஜமாத்தாக தராவிஹ் நடத்தபட்டது:

நான் உமர் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!' என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நல்லதாகிவிட்டது. இப்போது தொழுவது மிகக் சிறந்ததாகும் என்று உமர் (ரலி) கூறினார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் (மாலிக் முஅத்தா).

உமர் (ரலி) பின்பற்ற வேண்டும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த பொன் வார்த்தைகள்:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டு, ஒரு சிறப்பான பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டு கண்கள் நீரைச் சொரிந்தன; உள்ளங்கள் உருகின; அப்பொது யா ரசூலுல்லாஹ்! இது விடை பெறுபவரின் பிரசங்கம் போன்றல்லவா இருக்கிறது. எனவே, எங்களுக்கு இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று நபித் தோழர்கள் சொன்னார்கள். அப்போது கருப்பு இனத்தைத் சார்ந்த ஒருவர் உங்களுக்குத் தலைவராக வந்தாலும் அவருக்கு நீங்கள் வழிப்படுங்கள். உங்களில் எனக்குப் பின்னால் யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும்இ எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அந்த வழிமுறைகைளை நீங்கள் உங்கள் கடவாய்ப் பற்களால் கவ்விக் பிடித்துக் கொள்ளுங்கள். மார்க்கத்தில் புதிதாக எதையும் உண்டு பண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக உண்டு பண்ணப்படுபவை யாவும் வழி கேடுகளேயாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இர்பாள் பின் சாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூதாவுத், அஹமத்).

உமர் (ரலி) அவர்களின் நாவில் அல்லா குடி இருக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மதி).

என் அருமை தோழர்களே நான் எவ்வளவு நாட்கள் நான் உங்களுடன் இருக்க போகிறேன் என்பது எனக்கு தெரியாது, எனக்கு பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களையும், உமர் (ரலி) அவர்களையும் பின்பற்றுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினதாக ஹூதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (மிஷ்காத், அஹ்மத், திர்மதி & இப்னுமஜா).

எனக்கு பிறகு அல்லா ஒரு நபியை இந்த உலகுக்கு அனுப்ப நாடினால் அது உமராக (ரலி) அவர்களாக தான் இருப்பார்கள், ஆனால் அல்லா என்னை இறுதி நபியாக தேர்ந்தெடுத்துவிட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நபிமொழியின் சுருக்கம்).

இதுபோல் பல சிறப்புகளை சொல்லி கொண்டே போனாலும் அவர்கள் மார்க்கத்திற்கு செய்த அருட்கொடைகள்கள் சொல்ல வார்த்தைகளுகள் நம்மிடத்தில் இல்லை, அல்லா அவர்களை அந்தஸ்துகளையும், அவர்களின் கபுருகளையும் ஒளிமயமாக்குவனாக! ஆமின்.

3) மறுப்பவர்கள் வைக்கும் மிகப் பெரிய ஆதாரம்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்), புகாரி 3569 முஸ்லிம் 1343).

மேல் உள்ள நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி தஹஜ்ஜதை தான் குறிக்கின்றது தவிர, தராவிஹ் அல்ல.

அல்லா திருமறையில் தஹஜ்ஜத்ப் பற்றி குறிப்பிடுக்கின்றான்.

இன்னும் இரவில் ஒரு சிறு பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக, இதன் பாக்கியத்தினால் உம்முடைய இறைவன் மகாமம் மஹ்முதா என்றும் புகழ் பெற்ற தலத்தில் உம்மை எழுப்ப போதும் (17:79),

இன்னும் இரவில் அவனுக்கு ஸுஜுது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் தஸ்பிஹ் செய்விராக (76:26).

இங்கு தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக என்பது ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களையும் குறிக்கும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒரு மித்த கருத்து ஆகும்.

மேலும் தஹஜ்ஜத் பற்றி சிறப்புகள் பற்றி புகாரி, முஸ்லிம், திர்மதி, அபுதாவுத், இப்னுமஜா, நஸயி, அஹ்மத் & மாலிக் மூஅததா, உலகத்தில் உள்ள அனைத்து இமாம்களின் கிதாபுகளிலும் நபி (ஸல்) அத்தொழுகையின் சிறப்பை பற்றி நன்மையின் அளவையும், சிறப்பை பற்றி கூறினதை பதிவு செய்யாத இமாம்கள் இல்லை என்று கூட சொல்லாம்.

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் ண் காரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாதாக என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார் (புகாரி).

அல்லா தஹஜ்ஜத் சிறப்பை பற்றி தெளிவாக கூறுகின்றான், ஆனால் அல்லாவும் தஹஜ்ஜத் தொழுங்கள் என்று சொல்கின்றான், அதே போல் நபி(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகை மக்களுக்கு ஊக்கப்படுத்தினார்கள் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட விசயம்.

இப்போது நன்கு கவனிக்க வேண்டியவை, அல்லாவும், ரஸீல்(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகையை தொழுகும் மாறு கூறி இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ரமலானில் ஜமாத்தாக தொழுகை நடத்தின பிறகு ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். (புகாரி)

3 நாட்கள் தொழுகையை பற்றி தான் இங்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் தவிர, தஹஜ்ஜதைப் பற்றி குறிப்பிடவில்லை, ஏனென்றால் தஹஜ்ஜத் தொழுது வாருங்கள், அல்லாவுடைய அருள் தஹஜ்ஜதில் தான் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றி தொழுகை ஏவுவனதை தெள்ளத் தெளிவாக கூறி இருக்கும் போது பிறகு ஏன் இந்த தொழுகை உங்கள் மீது கடமையாகிவிடும் என அஞ்சினார்கள்??.

மேலும், நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஜமாத்து அன்றி 20 ரகஅத்துகளும், வித்ரும் தொழுதார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)இ ஆதார நூல்: பைஹகீ)

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர் என்று பைஹகீ இமாம் கூறுகிறார்.

பைஹகீ இடம் பெறும் இந்த ஹதிஸ் பலகினமானது, ஏனென்றால் இதில் இப்ராஹிம் பின் உஸ்மான் அபீஷைபா இடம் பெறுகிறார் என்று இதை தள்ளுபடி செய்கிறார்கள், ஆனால் இது பைஹகீ இமாமின் கருத்து கணிப்பு, ஆனால் இதே ஹதிஸ் இப்னு அபீஷைபா, முஸ்னத் அப்து பின் ஹுமைத், அல் முஜம் அல் அஸத் ஆகிய நூட்களில் ஹசன் தரத்தில் இந்த ஹதிஸை குறிப்பிட்டு அதன் கீழ் பதிவு செய்துள்ளார்கள், அதனால் இதை ஒதுக்கி விட மேன்று நீங்கள் நினைத்தால் அல்லாவிடத்தில் மாட்டி கொள்வது உறுதி.

சகோதரரே நான் இன்னும் 20 - 3கான ஆதரத்தை இன்னும் எடுத்து வைக்க வில்லை. ஏனென்றால் தாங்கள் உலமா இணையத்தில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்புகள் யாவும் மீள் ஆய்வுக்குரியது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், தங்களின் பதிலுக்காக நான் காத்து கொண்டு இருக்கிறேன், அதை வைத்து தான் அதன் அறிவிப்பாளர்கள் வரிசையுடன் ஆதரப்பூர்வமாக நிருபிக்ககாத் ஆவலுடன் உள்ளேன், ஏனென்றால் தாங்கள் எதற்கெடுத்தாலும் பலகினமானது என்று சொல்லி வருவதால் அதனால் எதனாலந்த ஹதிஸ்கள் எல்லாம் பலகினமடைகிறது நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

யார் உன்மை சொல்கிறார்கள் அல்லது யார் இட்டு கட்டுகிறார்கள் எனபதை பொறுமையுடன் அலசுவோம்.

இன்சா அல்லா தங்களின் பதில் வந்த பிறகு நான் ஒரே ஒரு ஹதிஸ் ஆதரபூர்வமாக நிருபித்துவிட்டால் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது, ஏற்று கொள்ள தயார் என்பதையும் நீங்கள் அறிவிப்பு செய்ய வேண்டும்.

உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் 23 ரக்கத்து தொழுத்தாக என்னிடம் சரியான அறிவிப்பாளருடன் ஒரே சில ஹதிஸ்கள் உள்ளது எனபதை தங்களிடம் முன்னாடியாக தெரிவித்து கொள்கிறேன்.

குறிப்பு:

தங்களிடம் ரமலானின் 8 - 3 ரக்கத்து 30 நாள் தொழுகிறார்கள் இது எதனால் நீங்கள் செய்கிறீர்கள், நபி(ஸல்) அவர்கள் ரமலானில் 30 நாள் பள்ளியில் ஜமாத்தாக தொழுததாக ஆதாரத்தை முன் வைக்குமாறு கேட்டுகொள்கிறேன், (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி)

எவ்வாறு என்னை தொழுக கண்டீர்களோ அது போல தொழுங்கள் (புகாரி).

இன்சா அல்லா அதற்கு பிறகு 20 ரக்கத்து நிலைமை பற்றி கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியின் சிறப்பு என்பது வேறு. இரவுத் தொழுகை 20 ரக்அத்களா என்பது வேறு. மஸ்ஜிதுல் ஹராமில் தொழும் ஒரு ரக்அத் ஒரு லட்சம் ரக்அத்களுக்குச் சமம். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் ஏற்றுக் கொள்கிறோம். மஸ்ஜிதுல் ஹராமின் சிறப்பின் நன்மையைக் கருதித் தனிப்பட்ட முறையில் ஒருவர் எத்தனை ரக்அத்களும் தொழுது கொள்ளலாம். இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் தொழவேண்டும் என்று ஒருவர் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் தொழவேண்டும் என்று நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் சகோதரர் சாதிக் அலி அவர்களுக்கு ஓரளவு தெளிவு கிடைக்கலாம்.

என்ன சகோதரரே நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவே குரல் கொடுக்க துவங்கி உள்ளீர்கள், "மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியின் சிறப்பு என்பது வேறு. இரவுத் தொழுகை 20 ரக்அத்களா என்பது வேறு" என்று நீங்கள் சொன்னீர்கள், நபிமொழியை நிறுத்து விட்டு உங்கள் கருத்துகளை அறிவியுங்கள், தாங்களா ஒரு ஹதிஸை தயார் செய்யாதீர்கள், தாங்கள் எல்லாம் அனைத்தும் கரைத்து குடித்தவர்கள் அல்ல, என்னையும் சேர்த்து தான் சொல்கின்கிறேன், எனக்கும் உன்மை எதுவும் தெரியாது, தங்களுக்கும் எதுவும் தெரியாது, தெரிந்ததை மட்டும் சொல்லுங்கள்.

எவன் ஒருவன் நம்மீது வேணுமென்ற ஒரு இட்டுகட்டி ஒரு செய்தியை அறிவிக்கின்றானோ அவன் தங்குமிடம் நரகம் தான் (நபிமொழியின் சுருக்கம்).

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

தராவீஹ் தொழுகை 20 ரக்அத்துகள் ஏன்?




நன்றி: K-Tic பிறை செய்தி மடல், குவைத்

புதன், 19 ஆகஸ்ட், 2009

தராவீஹ் தொழுகை...

நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஜமாத்து அன்றி 20 ரகஅத்துகளும், வித்ரும் தொழுதார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதார நூல்: பைஹகீ)

உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ரமழானில் மக்கள் 23 ரகஅத்துக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர்: யஜீது பின் ரூமான், ஆதார நூல்: பைஹகீ)

அலி (ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைக்கும்படி ஒருவருக்கு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அபுல்ஹஸனா, ஆதார நூல்: பைஹகீ, இப்னு மாஜா)

ஒருமுறை அலி (ரழி) அவர்கள் ரமழானில் குர்ஆனை நன்கு ஓதும் நபர்களை அழைத்து மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பதோடு அலி (ரழி) அவர்கள் தாமே அந்த மக்களுக்கு வித்ரும் தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர்: அபூ அப்துர் ரஹானிஸ் ஸில்மீ, ஆதார நூல்: பைஹகீ)

உமர் (ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: யஹ்யப்னு ஸயீத், ஆதார நூல்: இப்னு அபீ ஷைபா)

உபையு பின் கஃபு (ரழி) அவர்கள் மதீனாவில், ரமழான் மாதத்தில் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைத்து விட்டு 3 ரகஅத்துகள் வித்ரும் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல் அஜீஸ் பின் ரஃபீஉ, ஆதார நூல்: இப்னு ஷைபா)

இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் 20 ரகஅத்துகள் தொழுதுவிட்டு 3 ரகஅத்துகள் வித்ரு தொழுவார்கள். (அறிவிப்பவர்: அஃமஸ், ஆதார நூல்: கிதாபு கியாமுல்லைல்)

நாங்கள் உமர் (ரழி) அவர்கள் காலத்தில் 20 ரகஅத்துக்களும், வித்ரும் தொழுதோம். (அறிவிப்பவர்: ஸாயிபு பின் யஜீத், ஆதார நூல்: பைஹகீ)

இவ்வாறே ‘உமர் (ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் ரமழான் மாதத்தில் 20 ரகஅத்துகள் தொழுது கொண்டிருந்தார்கள்’ என்ற ஓர் அறிவிப்பும் பைஹகீயில் காணப்படுகிறது.

நோன்பு மற்றும் ரமழான் குறித்த தகவல்கள் சில....

- மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி

ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை

விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

1) ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ”நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா)

3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ, அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ, அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) நோன்பு மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும். ஆகவே, நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

ரமளான் நோன்பின் சிறப்புகள்

1) ‘நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்’ ஆகவே, நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் ‘நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை, அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

3) சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு ‘அர்ரய்யான்’ என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். ‘நோன்பாளிகள் எங்கே’ என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலால் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் (என) இரு சந்தோசங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

1) பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) பிறையைக் காணாத வரை நீங்கள் நோன்பு நோற்கவும் வேண்டாம், நோன்பை விடவும் வேண்டாம். பிறை தெரியாமல் மேகம் மறைத்துவிட்டால் (அம்)மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தர்மமாக அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (மழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் 2:184,185)

1) ஹம்ஸா இப்னு அம்ருல் அஸ்லமி என்னும் நபித்தோழர், நான் பிரயாணத்தில் நோன்பு நோற்கலாமா? என நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்டார்கள். (அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்) நீங்கள் விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் நோன்பை விட்டுவிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

2) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு யுத்தத்திற்குச் சென்றிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பை விட்டவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறவில்லை. யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர் நோன்பு நோற்பது அவருக்கு சிறந்ததென்றும், யாருக்கு அதற்கு சக்தி இல்லையோ அவர் நோன்பை விடுவது சிறந்ததென்றும் அவர்கள் கருதினார்கள் என அபூ சயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) ஒரு பிரயாணத்தின் போது நிழலிலே ஒருவரை சூழ்ந்து, மக்கள் கூடியிருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இந்த உங்களின் நண்பருக்கு என்ன ஏற்பட்டு விட்டது? என கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பாளி என கூறினார்கள். பிரயாணத்தில் நோன்பு நோற்பது நல்ல செயலில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)இன்னும் ஒரு அறிவிப்பில்: ஒரு மரத்தின் நிழலிலே ஒருவர் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. (ஆதாரம்: நஸாயி)

4) நபி (ஸல்) அவர்களுடன் கோடைகாலத்தில், நாங்கள் ஒரு பிரயாணம் செய்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தார்கள். நாங்கள் (வெப்பத்தின் காரணமாக அப்பிரயாணத்திலே) நிழலில் உட்கார்ந்தோம். நோன்பு நோற்றவர்கள்(களைத்து) விழுந்துவிட்டார்கள். நோன்பில்லாதவர்கள் எழுந்து பிரயாணிகளுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். இதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ”நோன்பில்லாதவர்கள் இன்று அதிக நன்மை பெற்றுவிட்டார்கள்” எனக் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

5) நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு தொழுகையில் பாதியையும் (அதாவது நான்கு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்தாக சுருக்குவதற்கும்) நோன்பை விடுவதற்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை விடுவதற்கு அனுமதித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்;: நஸாயி)

6) மக்கா வெற்றி பெற்ற வருடம் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக நபி (ஸல்) அவர்கள் (மக்கா) சென்றார்கள். கதீத் என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

7) கோடைகாலத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றிருந்தோம். (சூட்டின் காரணமாக)ஒரு மனிதர் தன் தலைக்கு மேல் கையை வைக்கும் அளவிற்கு அந்த சூடு இருந்தது. எங்களில் நபி (ஸல்) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்கவில்லை என அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்

1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) எத்தனையோ நோன்பாளிகள், அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர், இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, இப்னுமாஜா)

3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடலுறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் ” நோன்பாளி ” என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால்...

(யாராவது) மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால், அவர் அவருடைய நோன்பை பரிபூரணப்படுத்தட்டும், நிச்சயமாக அல்லாஹ்தான் அவரை சாப்பிடவும், குடிக்கவும் வைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்பாளி குளிப்பதில் தவறில்லை

1) நபி (ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

2) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலைமீது தண்ணீரை ஊற்றியதாக சில நபித்தோழர்கள் மூலமாக அபூபக்ர் இப்னு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், முஅத்தா, அபூதாவூத்)

3) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது ஈரத்துணியை தன்மீது போடுவார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்பாளியின் உளு

அல்லாஹ்வின் தூதரே! உளுவைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுங்கள் என நபி (ஸல்) அவர்களிடத்தில் நான் கேட்டேன். உளுவைப் பரிபூரணமாகச் செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள். இன்னும் விரல்களுக்கு மத்தியில் கோதிக் கழுவுங்கள், நோன்பில்லாத நிலையில் மூக்கிற்கு தண்ணீர் செலுத்துவதை அதிகப்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு சபீரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)

நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்

1) அமல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்தே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

பெருந்தொடக்குள்ள பெண்கள்

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும்போது (மாதவிடாய் காரணமாக) சுத்தம் இல்லாமல் இருந்தால் (தொழவும் மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்) சுத்தமானதும் நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ஆனால், விடுபட்ட தொழுகைகளைத் தொழும்படி ஏவமாட்டார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்

1) நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரை என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நானும், மஸ்ரூக் என்பவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் சென்று மூஃமின்களின் தாயே! நபி (ஸல்) அவர்களின் இரு தோழர்கள் நன்மை தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை, ஒருவர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி முதல் நேரத்தில் தொழுதும் விடுகின்றார். மற்றவர் நோன்பு திறப்பதைப் பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார் என்றனர். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படுத்துகின்றார்? என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) என்று நாங்கள் கூறினோம். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: மற்ற நபித்தோழர் அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் என்று வந்திருக்கின்றது. (ஆதாரம்: திர்மிதி)

பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது

1) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன், கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். (ஆதாரம்: திர்மிதி)

2) உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)

நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்

1) நோன்பாளி, நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா)

2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரை, நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) "எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

ஹஜ் பயணிகளுக்கு நாளை பயிற்சி முகாம்


கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை மாநிலத்தில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 19) பயிற்சி முகாம் நடைபெறும் என்று, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.ஏ.ரஹ்மான் அறிவித்து உள்ளார்.

அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த ஆண்டு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை பகுதிகளில் இருந்து 500 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஹஜ் பயணம் குறித்த விளக்கம் மற்றும் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி முகாம், கடலூர் மஞ்சக்குப்பம் கே.எஸ்.ஆர்.மகாலில் புதன்கிழமை காலை 9-30 மணி முதல் மாலை 5-30 மணி வரை நடக்கிறது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பயிற்சி அளிக்க உள்ளனர் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!


மனித நேயத்தை உருவாக்கும் மகத்தான நோன்பு!




அருள் பொழியும் ரமழான்! - 2



அருள் பொழியும் ரமழான்! - 1




புனித மக்கா, மதீனாவின் தொழுகை நேரங்கள்!



பிறையில் இல்லை குறை - 2





பிறையில் இல்லை குறை - 1





பிரச்னைகளும்...! பிரார்த்தனைகளும்...!!


ஷைத்தானுடன் ஒரு போர்!


நோன்பு நல்கும் நற்பயிற்சி!


தூய ரமளானே, வருக...!





ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை நடத்திய சுதந்திர தின விழா!





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... என அஸர் தொழுகை முடிந்த சிறிது நேரத்திற்கு பின்னர் ஹலோ மைக் டெஸ்டிங்.. மைக் டெஸ்டிங் என்ற ஒலி நம் காதுகளில் விழ ஒலி வந்த திசையை நோக்கி நாம் சென்றால் அது நகர ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் பிரண்ட்ஸ் PNO இணைந்து சின்னக்கடை தெருவில் நடத்தும் 63-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர் M.S.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி தலைமை தாங்க A.லியாகத் அலி மன்பஈ இறைவசனம் (கிராஅத்) ஓதி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

B.நூருல்லாஹ் பாஜில் பாகவி வரவேற்புரை நிகழ்த்த பரங்கிப்பேட்டை நண்பர்கள் அமைப்பின் (Friends PNO) தலைவர் M.K.நிசார் அஹ்மத் வாழ்த்துரை வழங்கினார்.

பரங்கிப்பேட்டை மஹ்மூதியா அரபிக் கல்லூரி முதல்வர் A.சித்திக் அலி பாகவி, மூனா பள்ளியின் முதல்வர் M.பாண்டியன், K.M.மீரான் முஹ்யித்தீன் ரஷாதி ஆகியோர் தங்களது உரையில் இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பினையும்-தியாகத்தையும் பற்றி விரிவாக பேசினார்கள்.

மக்ரிப் தொழுகைக்காக நேரம் விடப்பட்டு-பின் கூட்டம் தொடர்ந்து நடந்தது.

நிகழ்ச்சியினை M.முஹம்மத் ஷேக் ஆதம் தொகுத்து வழங்கினார்.

இறுதியாக A.லியாகத் அலி மன்பஈ நன்றியுரை ஆற்றினார்.

இஷா தொழுகைக்கு பாங்கு சொல்லவே நாம் விட்டோம் ஜூட்.....!

கட்டுரை & படம்: நமது நிருபர் - சுஹைல்

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி