முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

ஹஜ் பயணிகளுக்கு நாளை பயிற்சி முகாம்


கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை மாநிலத்தில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 19) பயிற்சி முகாம் நடைபெறும் என்று, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.ஏ.ரஹ்மான் அறிவித்து உள்ளார்.

அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த ஆண்டு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை பகுதிகளில் இருந்து 500 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஹஜ் பயணம் குறித்த விளக்கம் மற்றும் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி முகாம், கடலூர் மஞ்சக்குப்பம் கே.எஸ்.ஆர்.மகாலில் புதன்கிழமை காலை 9-30 மணி முதல் மாலை 5-30 மணி வரை நடக்கிறது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பயிற்சி அளிக்க உள்ளனர் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி