முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும், பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும், அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும், பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
வியாழன், 9 ஜூலை, 2009
குடும்பத்தில் மகிழ்ச்சி, மன நிம்மதி தேவையா?
ரஜப் மாத சிறப்பு கட்டுரை - 2
ரஜப் மாத சிறப்பு கட்டுரை - 1
தமிழக அரசின் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் சட்ட முன்வடிவு: மறுபரிசீலனை செய்ய முஸ்லிம் லீக்கின் தலைமையில் சமுதாய அமைப்புகள் வேண்டுகோள்!
திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு இந்திய இந்திய இக்கூட்டத்தில்
- தமிழக அரசின் திருமண கட்டாயப்பதிவு மசோதா, அனைத்து திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் வரைவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக முஸ்லிம்கள் மத்தியில் காலங்காலமாக திருமணங்களை பதிவு செய்யும் மரபை மஹல்லா ஜமாஅத் மற்றும் காஜிகள் மூலம் பின்பற்றி வருகிறது.
- தமிழக அரசின் திருமணப் பதிவு மசோதாவில் முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணப்பதிவுகளையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நிலை எடுக்கப்பட்டிருக்கிறது.
- முஸ்லிம் தனியார் சட்டத்தை பொது சிவில் சட்டத்துடன் இணைக்கும் விதத்தில் இது அமைந்து விடுமோ என்னும் ஐயப்பாடு சமுதாயத்தில் எழுந்திருக்கிறது.
- நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் இந்திய அளவில் ஒரே விதமான சிவில் சட்டம் கொண்டு வரும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த தி.மு.க. பாடுபடும் என்று டாக்டர் கலைஞர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த நிலைபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, சிறுபான்மை முஸ்லிம்களின் ஐயப்பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங்களை செய்து பின்னர் நிறைவேற்ற வேண்டும் என இக் கூட்டம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக
வட சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் என். ஜெய்னுல் ஆபிதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மவ்லவி
ஹாமித் பக்ரீ இறைமறை ஓதினார்.இக்
கூட்டத்தில் மாநில முஸ்லிம் லீக் விவசாய அணி துணை அமைப்பாளர் திருச்சி வி.எம். பாரூக், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, செயலாளர் பூவை எம்.எஸ். முஸ்தபா, வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.எச். இஸ்மாயில், மாநில முஸ்லிம் லீக் கல்வி மேம்பாட்டு துணை அமைப்பாளர் ஏ. ஷேக் மதார், யு. முஹம்மது சலீம் சித்தீக், கே.எம். ஹசன் சேக், வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே. எம். ரஃபி, பூவை காதர், டி.எம்.கே. ஹாஜா நஜ்முத்தீன், திருவான்மியூர் காஜா, சுன்னத் ஐக்கிய ஜமாஅத் பேரவை கிருஷ்ணாம்பேட்டை கிளை செயலாளர் எம்.ஏ. முஹம்மது இப்ராஹீம், ரஹ்மத்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மவ்லவி
சலீம் சிராஜி துஆ ஓதினார்.தில்லி ஜும்மா மசூதியின் முன்னாள் இமாம் வஃபாத்தானார்
புகழ்பெற்ற தில்லி ஜும்மா மசூதியின் முன்னாள் ஷாஹி இமாம் ஸயித் அப்துல்லாஹ் புஹாரி வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இத்தகவலை ஜும்மா மசூதியின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாம் ஸயித் அப்துல்லாஹ் புஹாரி தில்லி ஜும்மா மசுதியின் 12வது ஷாஹி இமாம் ஆவார்.
அவரது தந்தை இமாம் ஸயி ஹமீத் புஹாரி 11வது ஷாஹி இமாமாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் உள்ள சம்ஹார் என்னும் ஊரில் பிறந்த இமாம் ஸயித் அப்துல்லாஹ் புஹாரி தில்லியில் உள்ள அப்துர் ரப் மதரஸôவில் கல்வி பயின்றார்.
1946ல் இவர் ஜும்மா மசூதியின் துணை ஷாஹி இமாமாக நியமிக்கப்பட்டார்.
இவருக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.
இதில், அகமது புஹாரி என்னும் மகன் தான் தற்போது ஜும்மா மசூதியின் ஷாஹி இமாமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது