முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

செவ்வாய், 20 அக்டோபர், 2009

கடலூர் மாவட்டத்தில் 149 முஸ்லிம்களுக்கு நலவாரிய அடையாள அட்டை



உலமாக்கள்-பணியாளர் உறுப்பினர் சேர்க்கை: திருப்பூர் மாநகரில் கலந்தாய்வுக் கூட்டம்

உலமாக்கள்-பணியாளர் உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் நடைபெற்றது.

திருப்பூர் காங்கேயம் ரோடு அல்-அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஹெச்.எம். ஜபருல்லா பாகவி தலைமை தாங்கினார்.

திருப்பூர் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி வி.கே.எம். ஜகரிய்யா முன்னிலை வகித்தார்.

மௌலவி காரி அப்துன் நஸீர் பாகவி கிராஅத் ஓதினார்.

பெரிய பள்ளி இமாம் மௌலவி செய்யது அஹமது மிஸ்பாஹி வரவேற்புரையாற்றினார்.

டாக்டர் ஏ. அப்துன் நஸீர், ஐக்கிய ஜமாஅத் துணைத் தலைவர் ஹாஜி நஸீர் அஹமது ஆகியோர் உரையாற்றினர்.

உலமாக்கள் நல வாரிய பயன்பாட்டை அறியும் வழிமுறைகளை பற்றி வக்ஃபு வாரிய கண்காணிப்பாளர் சிராஜுத்தீன், வக்ஃபு வாரிய ஆய்வாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர்.

திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி நாசிர் அலி சிராஜி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வட்டார பகுதிகளிலிருந்து 68 பள்ளி வாசல்களின் இமாம்கள், முஅத்தின்கள், பணியாளர்கள், அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உலமாக்கள், பிலால்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை கோவை மண்டல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளர் என். சையது முஸ்தபா, திருப்பூர் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ஏ. முஹம்மது ரபி, ஹாஜி ஹபீப் ரஹ்மான், அப்துல் காதிர் ஜீலானி, ஜெய்னுல் ஆபிதின், அப்துல் சுக்கூர், எம்.ஒய். பக்கீர் முஹம்மது, பாபுஜி, ஹாஜி கலீலுர் ரஹ்மான் எம்.சி., உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், மாநில துணைத் தலைவர் பி.எஸ். ஹம்ஸா, திருப்பூர் மாநகர தலைவர் கே. சிராஜுத்தீன், துணைத் தலைவர் ஹாஜி முத்து வாப்பா (எ) அப்துர் ரஹ்மான், இளம்பிறை ஜஹாங்கீர், பள்ளப்பட்டி யூனுஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலமாக்களுக்கு வாழ்த்துக்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கு பாராட்டுக்களும் தெரிவித்தனர்.

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி