முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 28 மே, 2009

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு...
குழந்தைகளின் தகுதியும் திறமையும்.
ஓய்வின்றி ஓட்டம் ஆட்டமும் தொலைந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் காலம் வந்துவிட்டது.
புடி!படி! என எல்லோரும் ஒரு பரபரப்பை உருவாக்கிட போகின்றனர்! பிஞ்சு நெஞ்சங்கள் பதை பதைக்கப் போகின்றன. பள்ளிக்குச் செல்ல மனமின்றி ஏங்கும் குழந்தைகள் இன்னும் சில நாள் ஓய்வு நீடிக்காதா? ஏன கற்ப்பனை செய்து பார்ப்பார்கள்!
பேற்றோர்களோ கற்ப்பனை தேரினில் பறந்து கொண்டிருப்பார்கள்.தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி! டாக்டர், இஞ்சினியர்,என கற்பனைகள்.
நும் குழந்தை அப்படிப் படிக்க வேண்டும் இப்படிப் படிக்க வேண்டும் என பல்வேரு படிப்புக்ள. மதிப்பெண்களே லட்சியம்.
பெற்றோர்களின் கற்பனை குழந்தைகளின் திறமை இந்த இரண்டிற்கு மிடையே இடைவெளி வீழ்ந்து விடுவதுண்டு.
பெற்றோர்களின் கற்பனை குதிரைகளின் வேகத்திற்கினையாக குழந்தைகளின் படிப்பு வேகமடையவில்லையென்றால் மனத்தாங்கல்கள். ஆதங்கம் இவை வளர்கின்றன.
குடும்பத்தின் சுமூகமான சூழல் பாதிக்கப்படுகின்றது. பெற்றோர்களின் எதிர்பார்பிலிருந்து மதிப்பெண்கள் குறைய குறைய குழந்தையைக் குற்றம் பிடிப்பது அதிகமாகின்றது.
ஏரிந்து விழுகின்றார்கள். ஏளனம் பேசுகின்றார்கள்.
ஏதேனும் காரணத்திற்காக மதிப்பெண்கள் ஒரேடியாகக் குறைந்து போனால், குழந்தைகள் மீது பாயும் வெறுப்பு மொழிகள் அனல் பறக்கும்.
இதனால் குழந்தைகள் மனம் கூனி குறுகிப் போகின்றார்கள். பல நேரங்களில் குழந்தைகள் விரக்தி வயப்படுகிறார்கள். நம்மால் எதுவும் முடியாதுஎன்ற மந்த நிலைக்கு வந்து விடுவார்கள். சில நேரங்களில் அவர்கள் தற்கொலையே செய்து கொள்கிறார்கள்.
இப்படி விரக்தியை நோக்கி அவர்களை ஓட்டுவது எந்த வகையிலும் நியாயமல்ல.
குழந்தைகளின் தகுதிக்குமெல் சுமைகளை சுமத்துவது தவரு. இதில் நாம் குழந்தையையே இழந்துவிடவேண்டியது வரலாம்.
நம் குழந்தை என்னவாக இருக்க வேண்டும் என்பதை அதன் தகுதியும் திறமையும் முடிவு செய்யட்டும என்கின்றார் ஆராய்ச்சியாளர் ரங்கீன் சிங்.
றுந:ஆயசஉh(ள)2003
பெற்றோர்கள் செய்ய வேண்டியதெல்லாம குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்ததுக்கொள்ளவும் அந்தத்திறமைகளைப் பயன்படுத்தவும் தேவையான வழிவகைகளை ஏற்படுத்தித் தருவதுதான்;.
அத்தோடு திறமையான குழந்தைகள்கூட நட்பால் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் பெற்றோர்களின் கடமையாகும்.
அதேபோல பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தங்களால் என்ன வெல்லாம் இயலுமோ அவற்றையெல்லாம் முயற்ச்சி செய்து பார்க்கட்டும். அதனால் என்ன முடியுமோ அதைத் தேர்வு செய்யட்டும் அந்தத் தேர்வில் அது தன்னால் இயன்றதை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்கள் உதவலாம்.
அதுவல்லாமல் குழந்தைக்கு பிடிக்காத முடியாத எதையும் அதன் மீது திணிக்க வேண்டாம்
அவர்கள பள்ளிக்குச் செல்லட்டும் படிக்கட்டும் திறமைக்கேற்றதொரு பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும் அதற்க்கு நம்மால் இயன்றதையெல்லாம் செய்வோம்.
அன்பான அறிவுரைகள் குழந்தைகளைத் திருத்தவும் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தவும் போதும்.
எது எப்படியானாலும் குழந்தைகளை அடுத்தவர்கள் முன்னால் வைத்து அவமானப்படுத்திவிடாதீர்கள்.
அவர்களுக்கென ஓர் சுய கவுரவம் இருக்கின்றது. அதனை நீங்கள் தொட்டு புண்படுத்திவிடாதீர்கள்.
இதைநீங்கள் செய்தால் விபரீதமான செயல்களை உங்கள் குழந்தைகளிடமிருந்து எதிர்பார்கலாம்.
''சகிப்புத்தன்மையுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குற்றமனப்பான்மையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும் காப்பாற்றி விடுகிறார்கள். தவறுகள் குழந்தைகள் வளரும் பருவத்தின் ஒரு பகுதி என்பதை உணர்ந்தால் நன்மைகள் பல நடக்கும்.
நல்ல மன வளத்தை உங்கள் குழந்தைகளுக்குத் தந்துவிட்டால், அதுவே அவர்கள் தங்கள் திறமைகளை வளர்க்கவும், அவற்றைபயன் படுத்தவும் போதுமானதாக இருக்கும்'' .இப்படி பரிந்துரைக்கின்றார் 'ருக்கின் சிங்' என்ற ஆராய்ச்சியாளர்.
ஆக குழந்தைகளை உற்சாகப்படுத்தி வளர்ப்போம் அவர்களை அன்பால் அரவனைத்து வாழ்க்கையில் வீரர்களாய் ஆக்கிடுவோம். அவர்களின திறமையை விஞ்சும்; சுமைகளை அவர்கள் மீது சுமத்த வேண்டாம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
''...எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல்(எதுவும் செய்ய) நிற்பந்திக்கப்படமாட்டாது... அல்குர்ஆன் 2:233
''அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதுதாங்க முடியாத அளவுக்கு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை.'' அல்குர்ஆன் 3:286

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி