முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

புதன், 19 ஆகஸ்ட், 2009

தராவீஹ் தொழுகை...

நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஜமாத்து அன்றி 20 ரகஅத்துகளும், வித்ரும் தொழுதார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதார நூல்: பைஹகீ)

உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ரமழானில் மக்கள் 23 ரகஅத்துக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர்: யஜீது பின் ரூமான், ஆதார நூல்: பைஹகீ)

அலி (ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைக்கும்படி ஒருவருக்கு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அபுல்ஹஸனா, ஆதார நூல்: பைஹகீ, இப்னு மாஜா)

ஒருமுறை அலி (ரழி) அவர்கள் ரமழானில் குர்ஆனை நன்கு ஓதும் நபர்களை அழைத்து மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பதோடு அலி (ரழி) அவர்கள் தாமே அந்த மக்களுக்கு வித்ரும் தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர்: அபூ அப்துர் ரஹானிஸ் ஸில்மீ, ஆதார நூல்: பைஹகீ)

உமர் (ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: யஹ்யப்னு ஸயீத், ஆதார நூல்: இப்னு அபீ ஷைபா)

உபையு பின் கஃபு (ரழி) அவர்கள் மதீனாவில், ரமழான் மாதத்தில் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைத்து விட்டு 3 ரகஅத்துகள் வித்ரும் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல் அஜீஸ் பின் ரஃபீஉ, ஆதார நூல்: இப்னு ஷைபா)

இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் 20 ரகஅத்துகள் தொழுதுவிட்டு 3 ரகஅத்துகள் வித்ரு தொழுவார்கள். (அறிவிப்பவர்: அஃமஸ், ஆதார நூல்: கிதாபு கியாமுல்லைல்)

நாங்கள் உமர் (ரழி) அவர்கள் காலத்தில் 20 ரகஅத்துக்களும், வித்ரும் தொழுதோம். (அறிவிப்பவர்: ஸாயிபு பின் யஜீத், ஆதார நூல்: பைஹகீ)

இவ்வாறே ‘உமர் (ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் ரமழான் மாதத்தில் 20 ரகஅத்துகள் தொழுது கொண்டிருந்தார்கள்’ என்ற ஓர் அறிவிப்பும் பைஹகீயில் காணப்படுகிறது.

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி