உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ரமழானில் மக்கள் 23 ரகஅத்துக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர்: யஜீது பின் ரூமான், ஆதார நூல்: பைஹகீ)
அலி (ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைக்கும்படி ஒருவருக்கு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அபுல்ஹஸனா, ஆதார நூல்: பைஹகீ, இப்னு மாஜா)
ஒருமுறை அலி (ரழி) அவர்கள் ரமழானில் குர்ஆனை நன்கு ஓதும் நபர்களை அழைத்து மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பதோடு அலி (ரழி) அவர்கள் தாமே அந்த மக்களுக்கு வித்ரும் தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர்: அபூ அப்துர் ரஹானிஸ் ஸில்மீ, ஆதார நூல்: பைஹகீ)
உமர் (ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: யஹ்யப்னு ஸயீத், ஆதார நூல்: இப்னு அபீ ஷைபா)
உபையு பின் கஃபு (ரழி) அவர்கள் மதீனாவில், ரமழான் மாதத்தில் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைத்து விட்டு 3 ரகஅத்துகள் வித்ரும் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல் அஜீஸ் பின் ரஃபீஉ, ஆதார நூல்: இப்னு ஷைபா)
இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் 20 ரகஅத்துகள் தொழுதுவிட்டு 3 ரகஅத்துகள் வித்ரு தொழுவார்கள். (அறிவிப்பவர்: அஃமஸ், ஆதார நூல்: கிதாபு கியாமுல்லைல்)
நாங்கள் உமர் (ரழி) அவர்கள் காலத்தில் 20 ரகஅத்துக்களும், வித்ரும் தொழுதோம். (அறிவிப்பவர்: ஸாயிபு பின் யஜீத், ஆதார நூல்: பைஹகீ)
இவ்வாறே ‘உமர் (ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் ரமழான் மாதத்தில் 20 ரகஅத்துகள் தொழுது கொண்டிருந்தார்கள்’ என்ற ஓர் அறிவிப்பும் பைஹகீயில் காணப்படுகிறது.
0 படிச்சவங்க சொன்னது:
கருத்துரையிடுக