முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 22 ஏப்ரல், 2010

தொடங்கியது கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்கம்



பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை கடந்த 5 ஆண்டுகளாக கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்க வகுப்புகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.
அந்த வகையில் 6வது ஆண்டாக இவ்வருடமும் தனது பயிலரங்க வகுப்புகளை தொடங்கியது.

இன்று (22.04.2010) துவக்க நிகழ்ச்சி கும்மத் பள்ளியில் நடைபெற்றது.
ஏறக்குறைய 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் முதல் நாளன்று தங்கள் வருகையை உறுதிபடுத்தினர்.

இப்பயிலரங்கம் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு கும்மத் (புதுப்) பள்ளியிலும், மாணவிகளுக்கு சின்னத் தெரு முனையில் உள்ள பெண்கள் மதரஸாவிலும் திறமையான ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.






0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி